தமிழக சட்டசபை தேர்தல்; மதியம் 3 மணி நிலவரப்படி 70% ஓட்டுப்பதிவு
நமது சிறப்பு நிருபர்
தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று (ஏப்ரல் 23) 7 மணிக்கு துவங்கி நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும் மதியம் 3 மணி நிலவரப்படி 70% ஓட்டுப்பதிவாகி உள்ளது.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் இன்று சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது. மொத்தம் 5.73 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண் வாக்காளர்கள் 2.80 கோடி, பெண் வாக்காளர்கள் 2.93 கோடி, மூன்றாம் பாலினத்தவர்கள் 7,728 பேர். முதல் முறை வாக்காளர்கள், 14.5 லட்சம் பேர்.
மாநிலம் முழுவதும், 33,133 இடங்களில், 75,064 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. 1.06 லட்சம் ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் களத்தில், 234 தொகுதிகளில், 4,023 வேட்பாளர்கள் உள்ளனர்.
17.69% ஓட்டுப்பதிவு
காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் வாக்காளர்கள் வரிசையில் நின்று ஆர்வமாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். தமிழகம் முழுவதும் காலை 11 மணி நிலவரப்படி 37.56% ஓட்டுப்பதிவாகி இருந்தது. பிறகு மதியம் 1 மணி நிலவரப்படி, ஓட்டுப்பதிவு 56.81 சதவீதமாக அதிகரித்தது.
இந்த ஓட்டுப்பதிவு சதவீதம் மதியம் 3 மணிக்கு 70 சதவீதமாக உயர்ந்தது.
நான்குமுனை போட்டி
தி.மு.க., - அ.தி.மு.க., - த.வெ.க., - நாம் தமிழர் கட்சி என, நான்கு முனை போட்டி உருவாகியுள்ளது. காங்கிரஸ், தே.மு.தி.க., - வி.சி.க., உள்ளிட்ட, 22 கட்சிகளுடன் இணைந்து, தி.மு.க., மெகா கூட்டணியை அமைத்துள்ளது. பா.ஜ., - பா.ம.க., - அ.ம.மு.க., உள்ளிட்ட 12 கட்சிகளை இணைத்து, அ.தி.மு.க.,வும் பலமான கூட்டணியை அமைத்துள்ளது.
களத்தில் விஐபிக்கள்
முதல்வர் வேட்பாளர்களான, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், சென்னை கொளத்துார் தொகுதியிலும், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, சேலம் எடப்பாடி தொகுதியிலும், புதிய வரவான த.வெ.க., தலைவர் விஜய், திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதிகளிலும், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், காரைக்குடி தொகுதியிலும் களத்தில் உள்ளனர். விஐபி தொகுதிகளில் உள்ள ஓட்டுச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
90 விழுக்காடு வாக்குப்பதிவானால் ஆளும்கட்சி டேஞ்ஜர்
If more people their vote , it is a wrong signal for DMK and ADMK
ஆகா ஓஹோ திமுகவின் மாடல் ஆட்சியையும் வேண்டாம் விடியலும் வேண்டாம்
விளம்பர உலகில் விளம்பரப்படுத்தப்படும் பொருள் அல்லது நோக்கம் வேறு எதிர்மறையான எதனுடனும் தொடர்புபடுத்திக்கொள்ளும்படியாக இருக்க கூடாது என்று திட்டம் இடுவார்கள். இன்றைய நாளிதழ்களில் அதிமுக வெளியிட்ட விளம்பரங்களில் உள்ள தவறுகள் விளம்பர உலகின் அடிப்படை கொள்கைகளுக்கு அப்பாற்பட்டவையாக இருப்பது இவர்களின் தோல்வி மனபான்மையை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது . தங்கள் குறைபாடுகளை அடுத்தவர் மீது சுமத்தும் அவலம் கற்றறிந்த பொதுமக்களின் மனதில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்ற எண்ணமே இல்லாமல் வெளியிடப்பட்ட அறிவிலித்தனமான விளம்பரங்கள் . சொத்து வரி மற்றும் மின்சார கட்டண உயர்வுக்கு வழிகோலியவர்கள் இவர்கள் என்று நன்குணர்ந்தபோதும் இப்படிப்பட்ட விளம்பரங்களை வெளியிடும் குறை அறிவு படைத்தோர் மட்டுமே நிரம்பிய கட்சியாக அதிமுக பொதுமக்கள் பார்வையில் வெளிப்படுது.
இது வரை இல்லாத அளவு அபரிதமான வாக்குப் பதிவு. மக்கள் ஆளும்கட்சியை தூக்கி எறிய தயாராகி விட்டார்கள் என்பதையே இது காட்டுகிறது.
அப்ப ஆட்சி மாற்றம் கன்பார்ம்
வாக்கு சதவீதம் அதிகம் என்றால் ஆளும்கட்சி அவுட் என்பது சாதரன கணக்கு - போற போக்கை பாத்தா திமுக மூன்றாவது இடம் தான்
அகில இந்திய அளவில் பாஜக ஏற்கனவே சரிவைச் சந்தித்து வருகிறது. மக்களவையில் அவர்களுக்கு ஒற்றைக் கட்சிப் பெரும்பான்மை இல்லை, மத்தியிலும் பாஜக சிறுபான்மை அரசே ஆட்சியில் உள்ளது.
சில அடிமைத்தனமான கட்சிகளின் உதவியுடன் தமிழ்நாட்டில் காலூன்ற அவர்கள் விரும்புகிறார்கள், இது முற்றிலும் சாத்தியமற்றது
அந்த நடிகரும் அரசியல்வாதியுமானவரிடம் தமிழ்நாட்டைப் பற்றிய எந்த நுண்ணிய அல்லது பரந்த தரவுகளும் இல்லை.தமிழ்நாட்டில் உள்ள எந்தப் பிரச்சினையும் அவருக்குத் தெரியாது. முறையான பகுப்பாய்வோ அல்லது அதற்கான தீர்வோ இல்லாமல் அவர் வெறுமனே காற்றில் பேசுகிறார். அதன் செலவினங்களை அறியாமலும், அதன் மூலம் வருமானம் ஈட்டுவதற்காகவும் ஏதோ ஒரு தேர்தல் அறிக்கையை வெறுமனே வெளியிடுகிறார்.
நமது வெறித்தனமான ஆதரவாளர்கள் அதை வெறுமனே ஆரவாரம் செய்கிறார்கள். நீங்கள் மாறாத வரை அல்லது சரியாகச் சிந்திக்காத வரை எதுவும் மாறாது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்
ஒட்டு மொத்த வாக்கு சதவிகிதம் இந்த முறை முந்தய தேர்தல்களை விட அதிகமாக தான் இருக்கும். தமிழக வாக்காளர்களில் ஒன்றில் ஏழு வாக்காளர்கள் SIR மூலம் நீக்கப்பட்டுவிட்டனர். அதனால் இதற்க்கு முந்தய வாக்குபதிவு சதவிகிதங்களை உடைத்தெறியும் வாய்ப்பு மிக அதிகம். 7 கோடி வாக்காளராகள் இப்போது வெறும் 6 கோடிக்கு சற்றே குறைந்த எண்ணிக்கை. முன்னெல்லாம் 70-75 சதவிகித வாக்கு பதிவு நடைபெறும். இப்போது மொத்த வாக்காளர் எண்ணிக்கை குறையும்போது பதிவாகும் வாக்குகள் எண்ணிக்கையும் மாறுபடும். மொத்த வாக்கு பதிவு எண்ணிக்கை சாதனை படைக்கும் இந்த முறை. நாம் கவனிக்கவேண்டியது பெண்கள் வாக்கு பதிவு சதவிகிதம் . அதில் வயது வாரியாக நடைபெற்ற வாக்கு சதவிகிதம். இதை சரியாக கணிக்க தவறும் எந்த தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பும் தவறாக மட்டுமே ஆகும். நலத்திட்டங்களால் பயனடைந்த மகளிர் எப்படி நன்றிக்கடனை தீர்க்கிறார்கள் என்பது இங்கு ஒரு அதிமுக்கிய தரவு. இந்த தரவை தீர்க்கமாக கணிக்க தவறும் எவரும் சரியான முடிவை கணிக்க முடியாது.மேலும்
-
எம்.சி.டி., மேயர் தேர்தலுக்கான வேட்பாளர் பா.ஜ., அறிவிப்பு
-
அருணா அசப் அலி மருத்துவமனையில் முதல்வர் ரேகா ஆய்வு
-
'மெமு' வகை பயணியர் ரயில்களில் 12 பெட்டிகளாக உயர்த்த கோரிக்கை
-
பழையசீவரத்தில் சுகாதார நிலையம் ஏற்படுத்த மக்கள் கோரிக்கை
-
மரத்தில் ஆணி அடித்து பதாகைகள் வைப்பதால் பட்டு போகும் பரிதாபம்: மரங்களை பாதுகாக்க வலியுறுத்தல்
-
மாதிரி ஓட்டுச்சாவடியில் சிவப்பு கம்பள வரவேற்பு