தமிழகத்தில் லோக்சபா எம்பி தொகுதிகளின் எண்ணிக்கை 59 ஆக உயரும்: அமித் ஷா
புதுடில்லி: தமிழகத்தில் லோக்சபா எம்பி தொகுதிகளின் எண்ணிக்கை 39 ல் இருந்து 59 ஆக அதிகரிக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
@லோக்சபாவில் அவர் பேசியதாவது: அரசியலமைப்பு திருத்த மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை, தேர்தல் நடைமுறை மாற்றங்கள் குறித்த மசோதாக்கள் தென் மாநிலங்களவையின் பிரதிநிதித்துவத்தை குறைத்து, கணிசமான இழப்பை ஏற்படுத்தும் என்ற தவறான கருத்தும், குழப்பமும் பரப்பப்படுகிறது. தொகுதி மறுவரையறை மசோதா என்பது முந்தைய அரசுகள் கொண்டு வந்த மசோதாக்களை போலவே இருக்கும்.
குறையாது
1.லோக்சபாவில் மொத்த பலமான 543 இடங்களில் கர்நாடகாவில் இருந்து 28 பேர் தேர்வு செய்யப்படுகின்றனர். இது 5.15 சதவீதம் ஆகும். தற்போது தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்களும், அதை தொடர்ந்து அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்ட பிறகு கர்நாடகாவின் இடங்களின் எண்ணிக்கை 28 ல் இருந்து 42 ஆக உயரும். 816 ல் எம்பிக்களை கொண்ட அவையில் கர்நாடகாவின் பங்கு சுமார் 5.14 சதவீதமாகவே இருக்கும். எனவே கர்நாடகாவிற்கு எந்த இழப்பும் இல்லை.
2. ஆந்திராவில் தற்போது 25 எம்பி தொகுதிகள் உள்ளன. லோக்சபாவில் இதன் பிரதிநிதித்துவம் 4.60 சதவீதம் ஆகும். 50 சதவீதம் அதிகரிப்பு மூலம் இந்த எண்ணிக்கை 38 ஆகவும், லோக்சபாவில் அதன் பிரதிநிதித்துவம் 4.60 ல் இருந்து 4.75 ஆகவும் அதிகரிக்கும்.
3. தெலுங்கானாவிலும் தற்போது 3.13 சதவீத பிரதிநிதித்துவத்துடன் 17 தொகுதிகள் இருக்கின்றன. இங்கும் 50 சதவீதம் அதிகரிக்கப்பட்டு 3.18 சதவீத பங்குடன் 26 தொகுதிகளாக அதிகரிக்கப்படும்.
@block_B@4. தமிழகம் குறித்து பலரும் கவலை தெரிவிக்கின்றனர். தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறையாது. அதிகரிக்கவே செய்யும் தமிழகத்தில் 39 தொகுதிகள் உள்ளன. லோக்சபாவில் அதன் பிரதிநிதித்துவம் 7.18 சதவீதம், புது சட்டம் அமலுக்கு வந்த பிறகு எம்பி தொகுதிகள் எண்ணிக்கை 59 ஆக உயரும். 816 எம்பிக்களில் தமிழகத்தின் பங்கு 7.23 ஆக இருக்கும். தமிழகத்துக்கு எந்த இழப்பும் இல்லை. block_B
5. கேரளாவில் 3.68 சதவீத பிரதிநிதித்துவத்துடன் 20 தொகுதிகள் உள்ளன. புது சட்டம் அமலுக்கு வந்த பிறகு அவையில் அம்மாநில எம்பிக்கள் 30 பேர் இருப்பார்கள்.
543 எம்பிக்களின் தென் மாநிலங்களில் இருந்து 129 எம்பிக்கள் உள்ளனர். இது சுமார் 23.76 சதவீதம் ஆகும். புதிய சட்டப்படி தென் மாநிலங்களில் இருந்து 195 எம்பிக்கள் இருப்பார்கள். அவர்களின் பங்கு 23.97 சதவீதம் ஆகும்.
@twitter@https://x.com/dinamalarweb/status/2044764849792864327 twitter
தொகுதி மறுவரையறை சட்டத்தில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. புள்ளி, கமாவை கூட மாற்றவில்லை. தற்போது உள்ள சட்டத்தையே நீட்டித்துள்ளோம். முன்பு இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டதாக காங்கிரஸ் எம்பி பிரியங்கா கூறுகிறார். மீண்டும் அப்படி செய்யப்படும் என்கிறார். கடந்தகாலங்களில் இச்சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டு இருக்கலாம். ஆனால், நாங்கள் செய்ய மாட்டோம்
தவறான கருத்து
தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்கும்போது இச்சட்டம் கொண்டு வரப்படுவதாக அறிக்கைகள் வருகின்றன. இது சரியானது அல்ல. தொகுதி மறுவரையறை கமிஷன் அறிக்கை, பார்லிமென்ட் ஏற்றுக்கொண்டுஜனாதிபதி ஒப்புதல் அளித்த பிறகு தான் அமலுக்கு வரும். 2029ம் ஆண்டுக்கு முன்பு அமல்படுத்தப்படும் என்ற கேள்விக்கு இடமில்லை. 2029ம் ஆண்டு வரை தற்போதுள்ள அமைப்பு மற்றும் தொகுதிகளின் அடிப்படையிலேயே தேர்தல் நடக்கும். அகிலேஷ் உள்ளிட்டவர்கள் கவலைப்பட தேவையில்லை.
இவ்வாறு அமித்ஷா பேசினார்.
வாசகர் கருத்து (39)
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
17 ஏப்,2026 - 21:23 Report Abuse
இந்த தொகுதி அதிகரிப்பு அல்லது மறு சீரமைப்பு தேவை இல்லாத செலவினங்களை அதிகரிக்கும்.
ஏற்கனவே இருக்கும் உறுப்பினர்களே வாங்கும் சமூகத்திற்கும், சலுகைகளுக்கும் ஏற்றபடி பணி புரிவதில்லை. நாடாளுமன்றத்தில் வெறும் கூச்சல் தான். வெளிநடப்பு மற்றும் அலுவல் நடக்கவிடாமல் அமளி
இதில் இன்னும் ஒரு சுமார்300 உறுப்பினர்கள் தேவையா ? அவர்களுக்கு ஆகும் செலவுகள், அவர்களுக்கு அளிக்கப் படும் சலுகைகள், பென்ஷன் எத்தனை
கோடி ? கூட்டத் தொடரை நடக்கவிடாமல் அமளி, ஆர்ப்பாட்டம் தான் நடக்கப்போகிறது. இந்த செலவினம் அனைத்திற்கும் நாம் தான் வரி என்ற பெயரில் fund செய்யப் போகிறோம். இந்த காரணத்திற்காகவே வரைமுறை தேவை இல்லை. முடிந்தால் ஒரு
நாடாளுமன்ற தொகுதிக்கு 15 லட்சம் வாக்காளர்கள் என்று வரைமுறை செய்து திருத்தலாம். 0
0
Reply
venugopal s - ,
17 ஏப்,2026 - 13:20 Report Abuse
பாஜகவின் ப்ளான் ஏ திட்டம் 2011 மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்து தென்னிந்தியாவை வஞ்சித்து வட இந்தியாவை அரசியல் ரீதியாக பலப்படுத்தும் திட்டம் கடுமையான எதிர்ப்பால் நிறைவேற்ற முடியாமல் போனதால் பயந்து போய் ப்ளான் பி ஆன எல்லா மாநிலங்களுக்கும் சமமான தொகுதி உயர்வு என்ற திட்டத்தை தற்போதைக்கு நிறைவேற்றும் சூழ்ச்சி இது! இந்த சட்டத்தில் உள்ள ஷரத்தின் படி 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த பிறகு மறுபடியும் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை மறுசீரமைப்பு என்ற பெயரில் வட இந்தியாவில் அதிகப்படுத்தி தென்னிந்தியாவில் குறைக்க நினைக்கும் சூழ்ச்சி திட்டம் தான் இது. அதனால் தான் இந்த சட்டத்தை எதிர்த்து நீதிமன்றம் செல்ல முடியாது என்ற ஷரத்தையும் சேர்த்துள்ளனர்! தமிழ்நாடு இதை நிச்சயமாக கடுமையாக எதிர்க்க வேண்டும்! 0
0
Venkatesan Srinivasan - Hosur,இந்தியா
18 ஏப்,2026 - 10:23Report Abuse
கண்டிப்பாக மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைப்பு நடைபெற வேண்டும். அது 2026 மட்டும் இல்லாமல் ஒவ்வொரு பத்து வருடங்களுக்கு தடையின்றி தொடர்ச்சியாக நடைபெற வேண்டும். வட மாநிலங்கள் தென் மாநிலங்கள் என்று சில அரசியல் தலைவர்கள் குறிப்பிடுவது ஒரு வகையில் பிரிவினை மற்றும் கருத்து பேதம் உருவாக்க முயல்வதாக அமைகிறது. பிராந்திய மாநில கட்சிகள் எந்தவித தேசிய கண்ணோட்டமும் இல்லாமல் உள்ளன. அதன் தலைவர்கள் ஒரு குறுநில மன்னர்கள் போல் ஆட்சி அதிகாரத்தில் இருக்க விரும்புகின்றனர். இந்தியா ஒரு தேசம் ஒரு தலைமையில் இருப்பது தற்கால உலக அரசியல் நிலவரங்களுடன் பொருத்தமானது.
சீனா, ரஷ்யா, அமெரிக்கா, ஏனைய உலக நாடுகள் ஒற்றை தலைமையின் கீழ் தான் மற்ற நாடுகளால் அறியப்படுகிறது. தற்போதைய தமிழக ஆட்சியாளர்கள் மற்றும் அவர்களின் கூட்டாளிகள் ஆரம்ப காலம் முதல் தேச பிரிவினை, பிராந்திய எதேச்சாதிகார கொள்கை, மத்திய அரசுடன் இணக்கமின்மை, மொழி தீவிரவாதம், மக்களை தவறாக வழி நடத்தல், மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மக்களுக்கு இருட்டடிப்பு, கட்டுக்கடங்காத ஊழல், மத மற்றும் ஏனைய பயங்கரவாத செயல்களை கண்டும் காணாது இருத்தல், குடும்ப ஆட்சி ஆகிய மக்கள் விரோத நடவடிக்கைகளில் உள்ளனர். 0
0
Reply
PVSR - ,
17 ஏப்,2026 - 08:12 Report Abuse
எம்பிக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதால் மத்திய அரசுக்கு அதிக செலவு இல்லையா எல்லோருக்கும் சம்பளம் பங்களா இதர வசதிகள் ஒவ்வொருவரும் அவ்வப்போது சொந்த மாநிலத்திற்கு அரசு செலவில் விமானத்தை சென்று வருவார்கள் அது எல்லாம் அரசுக்கு சுமை தானே. நடுத்தர மக்களும் அடித்தட்டு மக்களும் மிகவும் பொருளாதார வசதி இல்லாததால் சிரமத்தை சந்தித்துக் கொண்டுள்ளனர் எம்பிக்கள் வீண் செலவு செய்வார்கள். 0
0
Reply
ravi subramanian - ,இந்தியா
17 ஏப்,2026 - 07:44 Report Abuse
Already existing 39 MPs’ are waste luggage only. It is even better to reduce this strength so that the common men’s tax burden will be reduced. 0
0
Reply
venugopal s - ,
16 ஏப்,2026 - 23:45 Report Abuse
இவர் சொன்னபடி செய்தால் சரிதான், ஆனால் பாஜகவினரின் நம்பகத்தன்மை சந்தேகத்தை உண்டாக்குகிறது! 0
0
vivek - ,
17 ஏப்,2026 - 11:12Report Abuse
வேணு அப்படி ஓரமா உட்கார்ந்து சந்தேகப்பட்டுக்கோ 0
0
Reply
Easwar Kamal - New York,இந்தியா
16 ஏப்,2026 - 22:43 Report Abuse
எங்கே நமக்கு ஆப்பு வந்திருமோ என்ற பயத்தில் கண்ணில் தென்பட்டது எல்லாவற்றையும் எதிர்க்க கிளம்பியாச்சு. இப்போ 39 இருந்து 59 ஆகி இருக்கிறது. 100 கொடுத்த கூட எண்ணத்தை கிழிக்க போறாங்க உங்க ஆட்கள். போய் ஒழுங்கா என்னை குப்பையை 5 வருஷத்துல அதை பேசி ஒட்டு கேளும். 0
0
Reply
Arjun Arjun - ,இந்தியா
16 ஏப்,2026 - 22:41 Report Abuse
Strictly in terms of finance and cash flow, how will the Govt pay for all of these MPs in addition to existing ones? It is beyond just salary, the perks, post tenure benefits etc? What is the real value of these additional MPs to the country and the people? 0
0
Reply
வில்லிபுத்தூரான் - xhennai,இந்தியா
16 ஏப்,2026 - 22:27 Report Abuse
நீட் தேர்வைப் பற்றிய எந்த அடிப்படைப் புரிதலும் இல்லாமல் அதை எதிர்த்தார்கள்.அதே போல் தான் இதுவும்.மத்திய அரசு கொண்டுவரும் சட்டத்தைக் கண்மூடித்தனமாக எதிர்த்தால் தன்னை பெரிய ஆளாகக் காட்டிக் கொள்ளலாம் என்ற சிறு பிள்ளைத் தனம் தான். 0
0
Reply
K.n. Dhasarathan - chennai,இந்தியா
16 ஏப்,2026 - 21:30 Report Abuse
ஐயா அமித் ஷா இப்போது தொகுதி மாரு வரையறைக்கு என்ன அவசியம், தேர்தல் முடியட்டும் ? சென்சஸ் முடியட்டும், 0
0
guna - ,
17 ஏப்,2026 - 11:13Report Abuse
தசரதா மாமன்னர் சொல்லிவிட்டார்...படைகளை திரட்டுங்கள்...இருநூறு ரூபாய் வாங்கவேண்டும் 0
0
Reply
l.ramachandran - chennai,இந்தியா
16 ஏப்,2026 - 21:24 Report Abuse
இவர்களுக்கெல்லாம் எப்படி சம்பளம் மற்றும் பயணப்படி, பென்ஷன் எல்லாம் கொடுப்பார்கள். மக்கள் தலையில் வரிச் சுமையை ஏற்றிவிடுவார்கள். வெள்ளைக்காரன் எவ்வளோவோ மேல். 0
0
Reply
மேலும் 26 கருத்துக்கள்...
மேலும்
-
பாட்ஷாவாக மாறும் ஸ்டாலின்; ரஜினி ரசிகர்கள் ஓட்டு சிக்குமா?
-
'ஹிந்து மதத்தை ஏய்ப்பவர்களுக்கு வேட்டு'
-
இறுதிக்கட்டத்துக்கு வந்த தேர்தல் பிரசாரம் துாக்கம் மறந்து ஓட்டு சேகரிப்பு பயணம்
-
நாமக்கல் குறிஞ்சி சீனியர் செகண்டரி பள்ளி மாணவியர் தேர்வில் சாதனை
-
வாக்காளரின் அடையாளத்தில் சந்தேகமா? 'சேலஞ்ச்' ஓட்டுக்கு ரூ.2 செலுத்த வேண்டும்
-
திருவிழாவில் ஏற்பட்ட தகராறு சிறுவன் உள்பட 4 பேர் கைது
Advertisement
Advertisement