உணவகத்தில் பயன்படுத்திய வீட்டு உபயோக சிலிண்டர் பறிமுதல்
காரைக்கால்: தள்ளுவண்டி உணவகத்தில் பயன்படுத்திய வீட்டு உபயோக காஸ் சிலிண்டரை 'புட்செல்' போலீசார் பறிமுதல் செய்தனர்.
காரைக்காலில், சட்ட விரோதமாக ஓட்டல்களில் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்கள் பயன்படுத்துவதாக புகார்கள் வந்தன. அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், நேற்று முன்தினம் காரைக்கால் கடற்கரை நடைபாதையில் இயங்கி வந்த தள்ளி வண்டி உணவகங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அதில் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் பயன்படுத்துவதை கண்டுபிடித்து, சிலிண்டர் மற்றும் 2 ரெகுலேட்டர்களை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக தள்ளுவண்டி உணவக உரிமையாளரான காரைக்கால் டி.கே., நகர் முகமது காசிம், 70, என்பவர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழகத்தை சீரழித்த திமுக-காங் கூட்டணியை விரட்டியடிப்போம்: மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல்
-
நேற்று சரிவு; இன்று உயர்வு: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1200 அதிகரிப்பு
-
அமெரிக்காவில் கஞ்சாவுடன் பிடிபட்ட ஏர் இந்தியா துணை விமானி; இந்தியாவுக்கு நாடு கடத்தல்
-
பெரம்பூரில் இன்று விஜய் பிரசாரம் ரத்து
-
என் குடும்பத்தை சிதைத்த பெருமை அன்புமணி மனைவி சவுமியாவையே சேரும்: ராமதாஸ் புகார்
-
கட்டுமான திட்டங்களுக்கு பிரீமியம் எப்.எஸ்.ஐ., எப்படி கணக்கிடப்படுகிறது?
Advertisement
Advertisement