அமெரிக்காவில் கஞ்சாவுடன் பிடிபட்ட ஏர் இந்தியா துணை விமானி; இந்தியாவுக்கு நாடு கடத்தல்

3

நமது நிருபர்




அமெரிக்க விமான நிலையத்தில் பையில் கஞ்சா வைத்திருந்த ஏர் இந்தியா துணை விமானி பிடிபட்டதை அடுத்து, அவர் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டார்.


அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில், ஏர் இந்தியா நிறுவனத்தைச் சேர்ந்த துணை விமானி ஒருவரின் பையில் கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது. இவர் டில்லியில் இருந்து சான் பிரான்சிஸ்கோ சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பயணித்துள்ளார். அவர் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு திரும்பும் விமானத்தை இயக்குவதற்காக சென்றுள்ளார்.

அமெரிக்க விமான நிலைய அதிகாரிகள் அவரது உடமைகளைச் சோதித்தபோது கஞ்சா இருப்பதைக் கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார். ஏர் இந்தியா விமான நிறுவனம் இந்தச் சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளது. அவர் விமானி பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.



இது குறித்து இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திற்கு (DGCA) தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில், அவர் கஞ்சாவைப் பயன்படுத்தவில்லை என்றும், அவரது பையில் மட்டுமே அது இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எந்தவொரு சட்ட மீறலுக்கும் இடமில்லை என்பதில் ஏர் இந்தியா விமான நிறுவனம் உறுதியாக உள்ளது, சம்பந்தப்பட்ட விமானி மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Advertisement