இன்றும், நாளையும் தபால் ஓட்டு செலுத்த வாய்ப்பு



கரூர் : கரூர் மாவட்டத்தில், அத்தியாவசிய சேவைகளில் பணிபுரியும் தெற்கு ரயில்வே துறை, அகில இந்திய வானொலி, கடல்சார்ந்த துறை, இந்திய விமான நிலைய ஆணையம், தொலைத்தொடர்புத்துறை, ஊடகவியலாளர்கள், தமிழ்நாடு போக்குவரத்து கழகம், தமிழ்நாடு மின்சார வாரிய பகிர்மான கழகம், தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை, சிறை மற்றும் சீர்திருத்த துறை, போக்குவரத்து காவலர்கள் ஆகியோர் தபால் ஓட்டு செலுத்த, 307 பேர் படிவம் 12-டி கொடுத்துள்ளனர்.
இவர்கள் நேற்று முதல் தபால் ஓட்டு செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை கரூர் ஆர்.டி.ஓ., அலுவலகம், கரூர் தாலுகா அலுவலகம், குளித்தலை சப்-கலெக்டர் அலுவலகத்தில் தபால் ஓட்டு செலுத்தினர். இவர்கள், இன்றும், நாளையும் ஓட்டளிக்கலாம் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement