டிராக்டர் கவிழ்ந்து இரண்டு பேர் பலி

தங்கவயல்: கேசம்பள்ளி அருகே பீர்னகுப்பா என்ற கிராமத்தில், டிராக்டர் ஓட்டும் பயிற்சியில் இரு இளைஞர்கள் ஈடுபட்டிருந்த போது, டிராக்டர் கவிழ்ந்து விழுந்ததில் இருவர் இறந்தனர்.

கேசம்பள்ளி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பீர்னகுப்பா என்ற கிராமத்தில் தர்ஷன் ரெட்டி, 18. லட்சுமி நாராயணா,18, என்ற இருவர் டிராக்டர் ஓட்டுவதற்கு பயிற்சி எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, டிராக்டர் திடீரென்று கவிழ்ந்தது. இதில், தர்ஷன் ரெட்டி, லட்சுமி நாராயணா ஆகிய இருவருமே டிராக்டரின் அடியில் சிக்கினர். இருவருக்கும் தலை, கால், உட்பட உடலின் பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திலேயே இருவரும் பலியாகினர்.

இந்த விபத்து குறித்து கேசம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisement