'அஞ்சு நிமிஷம் நிக்க முடியல 5 ஆண்டுகளில் எப்படி கவனிப்பார்?'
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தொகுதிக்குட்பட்ட நெடுகனேந்தல் கிராமத்தில், ஓட்டு சேகரிக்க சென்ற அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு, அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது, தி.மு.க.,வினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சுழி தொகுதியில் மீண்டும் போட்டியிடும் அமைச்சர் தங்கம் தென்னரசு, தொகுதிக்கு உட்பட்ட நரிக்குடி அருகே உள்ள நெடுகனேந்தல் கிராமத்திற்கு, ஓட்டு சேகரிக்க சென்றார். அப்போது, அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அவரை சூழ்ந்து, சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.
'கடந்த ஐந்து ஆண்டுகளில் நீங்கள் எதுவுமே செய்யவில்லை. தற்போது ஓட்டு கேட்க மட்டும் வந்திருக்கீங்க. பல ஆண்டுகளாக சாலை வசதி இல்லை. நல்லா இருந்த பாலத்தை உடைத்து, கட்டி முடிக்காமல் வைத்துள்ளனர். குடிநீர் தொட்டி அழுக்காக உள்ளது. அந்த தண்ணீரை தான் நாங்கள் குடிக்கிறோம்' என புகார் தெரிவித்தனர்.
அருகிலிருந்த தி.மு.க., நிர்வாகி, அவர்களை தடுக்க முயன்றபோது, 'எங்களை பேச விடுங்கள்' என, மக்கள் சரமாரியாக புகார் தெரிவித்து, 'இவற்றுக்கெல்லாம் பதில் சொல்லுங்கள்' என்றனர்.
ஆனால், தங்கம் தென்னரசு பதில் அளிக்காமல், காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார். கொதிப்படைந்த மக்கள், பரப்புரையின் போது வழங்கப்பட்ட 8,000 ரூபாய்க்கான போலி கூப்பன்களை, அங்கேயே கிழித்து போட்டு, தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
'ஐந்து நிமிடம் நின்று குறைகளை கேட்க முடியாதவர், அடுத்த ஐந்து ஆண்டுகள் எங்களை எப்படி கவனிப்பார்' என கேள்வி எழுப்பியதுடன், தி.மு.க.,வுக்கு ஓட்டு போட மாட்டோம் என, ஆவேசமாக முழக்கமிட்டனர்.
கொளுத்தவனுக்கும் கேடு கெட்டவனுக்கும் வாக்களித்தால் இதுதான் நிலை
திமுகவின் வெற்றி ஏற்கனவே உறுதி செய்யப்பட்டது ஒரு சில இடங்களில் இருக்கும் குறைகளை அடுத்த ஐந்து ஆண்டுகளில் செய்து முடிப்பார்கள்
5 ஆண்டுகளின் கடைசியில் உங்கள் கனவை சிரிக்காமல் சொல்லுங்கள். பிளீஸ்.
இந்த விழிப்புணர்வு 2021ல் இருந்திருந்தா romba நல்லா இருந்திருக்கும். ஆனாலும் better late than never.
அடேங்கப்பா, ஒரே முட்டா பொங்குறாய்ங்க. என்னவோ தகுதி தராதரம் பார்த்து நல்ல மனுஷனுக்கு ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்குறா மாதிரி. தொகுதியின் வளர்ச்சி, தொகுதி மக்களின் நலன், சாலைகள், பாலங்கள், தண்ணீர் வசதி, சிறந்த உட்கட்டமைப்பு வசதிகள், மருத்துவமனை இதெல்லாம் பார்த்து ஓட்டு போடுற மாதிரி ஷோ காட்டுறாய்ங்க. ஆயிரம் ரூவா, குடம், குக்கர், கொலுசு, குந்தாணிக்குத்தானே ஒட்டு போடுறாய்ங்க. பேச்சு பாருங்க.
அரசியல்வாதிகளுக்கு கள நிலைமை நெருப்பாக சுடுகிறது. மக்களை ஏமாற்ற முடியாது என்பது அரசியல் விழிப்புணர்ச்சி மூலம் வருவது பாராட்டத்தக்கது.
இந்தமுறை வாக்கு சேகரிக்க செல்லும் திமுக தலைவர்களுக்கு போகும் இடமெல்லாம் செருப்படிதான் ...
இந்த தி மு க கில்லாடிகள் வோட்டு வங்கியை முடக்கம் செய்யும் பலம் இருக்கு.
கருணா வீல் சேரில் கடைசி மூச்சு உள்ளவரை சென்று (சலுகைக்காக ) மக்கள் பணி ஆற்றினார். அதைப்பார்த்து அனைவரும் அவியல் செய்யலாமே
அவன் தாண்ட அரசியல்வாதி.
எந்த அமைச்சரும் தொகுதிக்கு தேவையானதை செய்யாமல், அவர்களுக்கு பணம் வருகிற திட்டங்கள்தான் ,செயல் படுத்தியுள்ளார்...
சிறுவர் பூங்காவாக, சிறுமியர் விளையாட் திடல், நடை பூங்கா,சிலை அமைத்தல் , வேறென்ன செய்தார்கள்.. விரட்டுங்கள்
ஆட்சியை விட்டு விரட்டுங்கள் ,கொள்ளைகாரர்கள்மேலும்
-
வேட்டையாடியது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தவரை கொன்றவர் கைது
-
கோடை வெயிலின் தாக்கம்: 20 வயது வாலிபர் பலி
-
வக்கீலை செருப்பால் அடித்த பெண் இன்ஸ்., மீது வழக்கு பதிய உத்தரவு
-
மஹா., போக்குவரத்து அதிகாரிக்கு மிரட்டல்
-
பந்துக்குள் கஞ்சா, மொபைல் போன் சிறைக்குள் வீசப்பட்டதால் பரபரப்பு
-
'பயோ காஸ்' உற்பத்தியில் ரூ.120 கோடி வருவாய் பெங்களூரு குடிநீர் வழங்கல் வாரியம் திட்டம்