உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகை டிரோன் பறக்க தடை

ஈரோடு, சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஈரோடு மாவட்டத்துக்கு இன்று வருகிறார். கொடுமுடி தாமரைப்பாளையம் தாமரை மெட்ரிக் பள்ளி மைதானத்தில் ஹெலிகாப்டரில் வந்து இறங்குகிறார். அங்கிருந்து சிவகிரிக்கு சென்று பிரசாரத்தை முடித்துவிட்டு திரும்புகிறார்.


தாமரைபாளையம் வந்து சிவகிரி சென்றுவிட்டு செல்லும் வழிகளில், 2 கி.மீ., சுற்றளவுக்கு டிரோன்கள், இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க, இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி பறக்கவிட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுப்பார்கள் என்று, ஈரோடு கலெக்டர் கந்தசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்

Advertisement