விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு; ஜூன் 15ம் தேதிக்கு ஒத்திவைப்பு

17


சென்னை: நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயிடம் இருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரி தொடர்ந்த வழக்கு விசாரணை ஜூன் 15ம் தேதிக்கு கோர்ட்டில் ஒத்திவைக்கப்பட்டது.


கடந்த பிப்ரவரி மாதம் விஜயிடம் விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா மனுத்தாக்கல் செய்தார். சங்கீதாவின் விவாகரத்து கோரியதன் பின்னணி குறித்து அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகின. விஜய்க்கும், நடிகை ஒருவருக்கும் கள்ள உறவு இருப்பதாக சங்கீதா மனுவில் குற்றம்சாட்டி இருந்தார்.

இந்த வழக்கு செங்கல்பட்டு 1வது குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவிற்கு ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தும் அவர்கள் இன்று ஆஜராகவில்லை.



விஜய் மற்றும் சங்கீதா தரப்பில், அவர்களது வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகினர். விசாரணையை ஒத்திவைக்கும் படி விஜய் தரப்பு வழக்கறிஞர் கேட்டு கொண்டார். பிறகு, வழக்கு விசாரணையை ஜூன் 15ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி சசிகலா உத்தரவிட்டார்.

Advertisement