திமுகவுக்கு எதிராக மக்கள் கோபம் வெளிப்பட துவங்கி இருக்கிறது; அண்ணாமலை
மயிலாப்பூர்: திமுக வீழ்த்தப்பட வேண்டும் என்று மக்கள் நினைக்கின்றனர். திமுகவுக்கு எதிராக மக்கள் கோபம் வெளிப்பட துவங்கி இருக்கிறது என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மயிலாப்பூரில் தேர்தல் பிரசாரத்தில் அண்ணாமலை பேசியதாவது: இன்றைக்கு மிக தெளிவாக எல்லோரும் வெற்றி பெற போகிறோம். மே4க்கு பிறகு இபிஎஸ் முதல்வராக பதவியேற்பார். தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக களத்தில் மிகப்பெரிய மாற்றத்தை காண்கிறேன். தேஜ கூட்டணிக்கு ஆதரவாக ஒரு பெரிய அலை உருவாகி இருக்கிறது. தென் தமிழகம், கொங்கு மற்றும் டெல்டா பகுதிகளில் திமுகவுக்கு எதிராக கோபம் முழுமையாக களத்தில் வெளிப்பட ஆரம்பித்து இருக்கிறது.
பார்லியில் இடஒதுக்கீடு மசோதாவை எதிர்த்த காரணத்தினால், பெண்கள் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக ஓட்டளிக்க போகிறார்கள். களம் சிறப்பாக இருக்கிறது, திமுக வீழ்த்தப்பட வேண்டும் என்று மக்கள் நினைக்கின்றனர். 23ம் தேதி நீங்கள் பார்ப்பீர்கள். தேஜ கூட்டணி வேட்பாளர்கள் மிகப்பெரிய வெற்றியை பெறுவார்கள். ராகுல் உட்பட யாரும் பாஜ உள்ளே வரக்கூடாது என்று பிரசாரம் செய்கிறார்கள், முதல்வராக ஸ்டாலின் வர வேண்டும் என்று யாரும் பிரசாரம் செய்யவில்லை.
ராகுலும், ஸ்டாலினும் ஒரே மேடை ஏறவில்லை. தனித்தனியாக நின்று கொண்டிருக்கின்றனர். போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துவிட்டது. சட்டம் ஒழுங்கை சீர் செய்ய வேண்டும். கோவில் வாசலில் தேங்காய் உடைத்தால் எப்படி சிதறுமோ, அதேபோல் திமுக கூட்டணி சிதறி இருக்கிறது. 169 இடங்களில் நிற்கும் அதிமுக எப்படி பாஜவின் பினாமியாகும். தேவையில்லாமல் வதந்தியை பரப்பிக் கொண்டு இருக்கிறார்கள். தமிழக மக்களுக்கு தெளிவாக தெரியும். திமுகவுக்கு எதிரான ஓட்டை ஏப்ரல் 23ம் தேதி மக்கள் செலுத்த இருக்கிறார்கள். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.
நிருபர்களுக்கு பேட்டி
முன்னதாக, தஞ்சையில் நிருபர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: விஜய் இதுவரைக்கும் கொடுத்து இருக்கும் வாக்குறுதிகள் குறித்து பல இடங்களில் பேசி இருக்கிறார். அதனை ஒருவர் கணக்கு போட்டு சொல்லி இருந்தார். 4 லட்சத்து 83 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும் என்று ஒருவர் சொல்லி இருந்தார்.
தமிழகத்தின் பட்ஜெட்டே 4.50 லட்சம் கோடி தான். தமிழக வெற்றிக்கழகம் கொடுத்து இருக்கும் வாக்குறுதிகள் செலவு பட்ஜெட்டை தாண்டி இருக்கிறது. இதனை மக்கள் மன்றத்தில் வைக்கிறேன். மக்கள் இதையெல்லாம் பார்த்து முடிவு எடுக்கட்டும். எல்லா அரசியல் கட்சிகளுமே வாக்குறுதிகள் கொடுத்து இருக்கிறார்கள்.
இன்றைக்கு உச்சநீதிமன்றத்தில் எது சரியான வாக்குறுதிகள், சரியில்லாத வாக்குறுதிகள் தரம்பிரிக்க பார்க்கிறார்கள். இலவசங்கள் என்ன, மக்களுக்கு அடிப்படையாக செய்து கொடுக்க வேண்டிய வசதிகள் என்ன என்று சுப்ரீம்கோர்ட்டில் வழக்குகள் நிலுவையில் இருக்கிறது.
அதுக்குள்ள போக விரும்பவில்லை. மக்கள் இன்றைக்கு எல்லாவற்றையும் பார்க்கிறார்கள். மக்கள் ஓட்டு செலுத்தும் போது, சில வாக்குறுதிகளால் கடன் அதிகரித்தால் என்னவாகும் என்று யோசித்து பாருங்கள். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
தினமலர் நேரலை
மயிலாப்பூரில் தமிழிசைக்கு ஆதரவாக அண்ணாமலை தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். தினமலர் யூடியூப் உள்ளிட்ட இணையத்தில் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது.
லைவ் வீடியோவை பார்க்க கிளிக் செய்யவும்
ஒரு நூற்றாண்டு கடந்த பிறகும் கூட, தமிழ்நாட்டில் உள்ள சில அடிமைப் கட்சிகளின் துணையின்றி, இந்த பாஜகவால் சொந்தமாக ஒரு இடத்தைக் கூடப் பெற முடிவதில்லை. இவர்கள் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட மாநிலங்களுக்குச் சென்று அவற்றை மேம்படுத்தட்டும். பாஜக ஆளும் இந்த மாநிலங்கள் வெறும் நுகர்வோராகவே இருந்து கொண்டு, தமிழகம் மற்றும் பிற தென் மாநிலங்களின் வரி வருவாயை உறிஞ்சி வாழ்கின்றன. மக்கள் தொகையைப் பெருக்குவதில் மட்டுமே இவர்கள் வல்லவர்கள்.
வாங்குன காசுக்கு பேசிதானே ஆகவேண்டும்
இதுவரை இவர் சொன்ன எதுவுமே பலித்தததில்லை
இன்னும் இரண்டு நாட்களில் என்ன மாதிரி அலைகள் வரும் என தெரியாது.
திமுகவிற்கு எதிராக வாக்காளர் மட்டுமல்ல பிரேமலதா, ராகுல் கோபத்தில் உள்ளனர்? கட்சியினர் எப்படி வாக்களிக்க வேண்டும் என்று விருப்பதை தெரிவித்து விட்டனர். தொகுதி மறு சீரமைப்பில் உறுப்பினர்கள் எண்ணிக்கை கூடும். அதனை நாடு முழுவதும் மகளிருக்கு வழங்க பிஜேபி விரும்பியது. காங்கிரஸ், திமுக சிறுபான்மை ஆதரவு பெற மகளிர் இட ஒதுக்கீடு விரும்பாது . நடிகர் விஜய் பட்ஜெட் விட இலவச திட்டங்கள் அதிகம் நடைமுறைக்கு சாத்தியமல்ல. ஓட்டை பிரிக்க உதயமானது வெட்டி கழகம்?
மக்கள் நெருப்பா இருக்காங்க ..... இருந்தாலும் பணப்பட்டுவாடா வந்துட்டா மக்கள் நெருப்புல மழை பெய்ஞ்சமாதிரி ஆயிடுவாங்க .....
ஏன் CAG சொன்ன 765000000 இருக்கு இல்ல நீங்களும் மக்கள் நெருப்பா இருக்காங்க ..... இருந்தாலும் பணப்பட்டுவாடா வந்துட்டா மக்கள் நெருப்புல மழை பெய்ஞ்சமாதிரி ஆயிடுவாங்க .....
உங்கள் மாநில தலைவர் பதிவையை பறித்தவர்கள் மீது உங்கள் கோபம் வெளிவருமா அல்லது பயம் வெளியேபடுமா என்று மக்கள் மத்தியில் பேசிக்கொள்கிறார்கள்.
சிவநாயகம் சொந்த அறிவோடு எப்போது கருத்து போடுவீர்கள்
தொகுதி மறு வரை விவகாரத்தில் பாஜக படுதோல்வியை சந்தித்திருக்கிறது. இந்த விவகாரத்தை கையில் எடுத்து பேசியதன் மூலம் இந்திய அளவில் பேசப்படும் முக்கிய அரசியல் தலைவராக மாறி இருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின். தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும் என்ற அவரது முழக்கம், தற்போது இந்தியா முழுவதும் எதிரொலிக்கிறது.
இதற்கு பதில் சொல்லு
Loose Akuryadevan, total MP count was 41 in early 50s now 39, go ask your Stalin why, don't be tharkuri like your leader, also ask the thirkuri why Wilson MP asking to move the delimitation to 2051, is that bcz your stalin and his parivar won't be alive that time
Comments are always LKGish..
பெண்களின் உரிமையை பறித்தது இந்த திருடர்கள் கூட்டணி .பெண்கள் உங்க கூட்டணிக்கு வைக்க போறாங்க ஆப்பு.
படு தோல்வி எல்லாம் கிடையாது ஆகு . எதிர்பை விட ஆதரவு ஓட்டுக்கள் தான் அதிகம் .
அண்ணா டீம் ka
முதலில் நீங்கள் ஒரு MAJORITY அரசு இல்லை MINORITY அரசு தான் அப்புறம் எப்படி சாத்தியம் , உங்களிடம் உள்ள MP 243 ,2/3 வோட்டு வேண்டும் அதாவது 362 MP வேண்டுமாம் , ஆகவே எப்போதும் முடியாது இது என்னமோ மாநிலங்களில் MLA க்களை விலைக்கு வாங்கி ஆட்சி மாற்றி அமைப்பது போலவா மோடி அவர்களே
Tharkuri Akuryadevan, BJP is working as per constitution, not like your Thiruttu Dravidian Party who passed the bills which are not good
ஆளும் NDA கூட்டணியாக தேர்தலை சந்தித்து வென்று கூட்டாக ஆளுகிறது. பல கட்சியினர் முக்கிய அமைச்சர்களாக உள்ளனர். NDAவுக்கு தேவையான அளவுக்கு அதிகமாக மெஜாரிட்டி உள்ளது. முதலில் அரசியல் அடிப்படை தெரிந்து கருத்துப் பதிவு செய்யுங்க.மேலும்
-
'புதுச்சேரி - தமிழகத்தில் காங்கிரஸ் இரட்டை இலக்கத்தை தொடாது'
-
தேர்தல் கமிஷனில் பொற்கொடி முறையீடு
-
தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு துவக்கம்; ஓட்டளிக்க மக்கள் ஆர்வம்
-
திரு.வி.க., நகரில் ரவுடிகள் வலம்; தி.மு.க., வேட்பாளர் அலறல்
-
'பென்சில், பேனா, நோட்புக்' தொகுப்புடன் 'பூத்' கமிட்டியினருக்கு தலா ரூ.2,000
-
நா.த.க., மீது தேர்தல் விதிமீறல் வழக்கு