இ-85 எத்தனால் கொள்கையை பரிசீலிக்க மத்திய அரசு திட்டம்
புதுடில்லி: மேற்கு ஆசிய போரால், இ- 85 என்ற 85 சதவீதம் எத்தனால் கலப்பு பெட்ரோல் தொடர்பான செயல்பாட்டு கொள்கையை மத்திய அரசு ஏற்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது.
அண்மையில், ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 100 அமெரிக்க டாலருக்கு அதிகமாக இருந்தது. அதன் விலை, ஒரு டாலர் அதிகரித்தாலும், இந்தியாவிற்கு 16,000 கோடி ரூபாய் வரை இறக்குமதி செலவு அதிகரிக்கும்.
இந்த இ-85 எத்தனால் கலப்பு பெட்ரோலில், 85 சதவீதம் எத்தனாலும், 15 சதவீதம் பெட்ரோலும் இருக்கும். தற்போது இந்தியாவில், இ-20 பெட்ரோல் பயன்படுத்தப்படுகிறது.
இந்தியாவின் மொத்த எத்தனால் தேவை 1,100 கோடி லிட்டராக உள்ள நிலையில், தேவைக்கு அதிகமாக 2,000 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால், பெட்ரோலில் எத்தனால் கலப்பை மேலும் அதிகரிக்க, எத்தனால் உற்பத்தியாளர் சங்கங்கள் தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகின்றன.
இ-85 பெட்ரோலில் இயங்கும் வாகன விலை, உற்பத்தி செலவுகள், எரிபொருள் இருப்பு, வாகன மைலேஜ் உள்ளிட்ட பலவற்றில் பிரத்யேகமான வாகன சோதனைகள் தேவைப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
நல்லது நடந்தால் நன்மையே ஆன்னியனிடம் அவதிபடுவதை விட நம் தேவையை நாமே தயார் படுத்துவதனால் நம் எதிர்காலம் மிகச் சிறப்பாக இருக்கும்மேலும்
-
படித்தவனுக்கு மதிப்பில்லை; நடிக்கிறவனுக்கு தான் மதிப்பு; பிரசாரத்தில் சீமான் ஆவேசம்
-
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து; உரிமையாளர் கோர்ட்டில் சரண்
-
நடிகர் சத்யராஜ் குடும்பத்தினர் நடத்தும் அரசியல் நாடகம்: அப்பா, மகள் திமுக., மகன் தவெக.,
-
இந்தியா எதையும் மறக்காது; பஹல்காம் சம்பவத்தை நினைவு கூர்ந்த ராணுவம்
-
பாமக குழப்பங்களுக்கு ஸ்டாலினும், சபரீசனும்தான் காரணம்; அன்புமணி புகார்
-
உண்மை உறங்காது; நமக்காக பிரசாரம் செய்யும் பிரேமலதாவுக்கு நன்றி; இபிஎஸ்