உண்மை உறங்காது; நமக்காக பிரசாரம் செய்யும் பிரேமலதாவுக்கு நன்றி; இபிஎஸ்
நமது நிருபர்
சேலத்தில் இன்று நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், ''திமுக கூட்டணியில் இருந்தாலும் நமக்காக பிரசாரம் செய்யும் பிரேமலதாவுக்கு நன்றி. எப்போதும் உண்மை உறங்காது,'' என்றார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான இறுதி கட்ட பிரசாரத்தையொட்டி, சேலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் இபிஎஸ் பேசியதாவது: தமிழகத்தை சுரண்டிப் பிழைக்கும் ஒரு குடும்பத்துக்கும், தமிழக மக்களுக்கும் நடக்கும் தேர்தல் இந்த சட்டசபை தேர்தல். ஒரு குடும்பம் பிழைக்க 8 கோடி மக்களை வாட்டி வதைக்கிறார்கள்.
இந்த குடும்ப ஆட்சிக்கும் வாரிசு அரசியலுக்கும் முடிவுகட்டுங்கள். இந்த தேர்தல் கருணாநிதி குடும்பத்துக்கு மூடுவிழா நடக்கும் தேர்தல். அண்மையில் ஆ.ராசா ஆடியோ வெளியானது, கருணாநிதி உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது ஸ்டாலின் வீட்டுச்சிறையில் வைத்திருந்தார் என்று சொன்னார்.
ஏன் கோபம்?
உங்க கட்சிக்காரர் சொன்னார் என்றால், அவரைக் கண்டியுங்கள். அவர் உண்மையைச் சொல்லியிருப்பார், இல்லையென்றால் ஸ்டாலினுக்கு ஏன் கோபம் வருகிறது? திமுக ஆட்சியில் கிட்னி திருடுறார்கள். திமுக எம்.எல்.ஏ மருத்துவமனையில் முறைகேடாக கிட்னி எடுத்தனர். இதெல்லாம் ஆட்சியா? மனிதாபிமானம் இல்லாமல் ஆட்சி நடக்கிறது. குமாரபாளையத்தில் ஒரு பெண்மணிக்கு கிட்னிக்கு பதிலாக கல்லீரலை எடுத்துவிட்டனர்.
உடல் உறுப்பை கொள்ளையைடிக்கும் அரசு தேவையா? திமுக 200 இடம் பெறும் என்கிறார்கள், 20 இடம் பெறுவதே ஆச்சர்யம். திமுகவுக்கு 20 இடங்கள் கூட கிடைக்காது. அதிமுக கூட்டணி 210 தொகுதிகள் வெல்லும். அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். ஆட்சி அமைத்து மூன்றே மாதத்தில் போதை பொருள் ஒழிக்கப்படும். எப்போது பார்த்தாலும் ஸ்டாலின் 39 எம்பிக்கள் வெற்றி பெற்றோம் என்கிறார். அத்தனை பேரும் பெஞ்ச்சை தேய்க்கிறார்கள்.
100க்கு 100%
திமுக ஆட்சியில் மின்கட்டணம் கடுமையாக உயர்ந்துவிட்டது. திமுக ஆட்சியின் வரிச்சுமையால் பாதிக்கப்பட்ட மக்களின் துன்பத்தைக் களைய உதவித்தொகை 10 ஆயிரம் ரூபாய் வங்கியில் செலுத்தப்படும். அதிமுக ஆட்சிக்கு வந்தால், எல்லா குடும்பத் தலைவிக்கும் மாதம் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். சேலம் மாவட்டம் 11 தொகுதியும் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
100க்கு 100% வெற்றி பெற ஓட்டளியுங்கள். 10 ரூபாய் என்றால் உங்களுக்கே தெரியும். புது வித்தைகளைக் கண்டுபிடித்து ஊழல் செய்வதில் ஊழல் மன்னன் யார்? நல்லது செய்வதற்கு அமைச்சர்கள் செயல்பட வேண்டும்.எப்படியெல்லாம் கொள்ளையடிக்கலாம் என்று திட்டம் போட்டு திருடும் கூட்டம் திருடிக்கொண்டே இருக்கிறது.
உண்மை உறங்காது!
திமுக பலம் வாய்ந்த கூட்டணி என்கிறார். உண்மை அதுவல்ல. ஏற்கனவே இருந்த அதே கூட்டணிதான், ஒரே ஒரு கட்சிதான் சேர்ந்திருக்கிறது. அன்புமணி சொன்னதுபோல் அவர் அங்கு போய் நமக்காக பிரசாரம் செய்கிறார். எப்போதும் உண்மை உறங்காது, தர்மம் தோல்வியடையாது. எதிரியிடம் போய் கைகோர்த்து நின்றாலும் உள்ளே இருக்கும் மனம் வெளிப்படுத்துகிறது, நமக்காக குரல் கொடுப்பதற்கு நன்றி. இவ்வாறு இபிஎஸ் பேசினார்.
தினமலர் நேரலை
சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் இறுதிகட்ட பிரசாரம் மேற்கொண்டார். அனல் பறந்த பிரசாரம் தினமலர் யூடியூப் உள்ளிட்ட இணையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
லைவ் வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
எடப்பாடி பழனிசாமி அவர்கள் நிச்சயமாக ஆட்சியை பிடிப்பார். அதற்கு நம் மக்கள் திருந்த வேண்டும். கொள்ளை கும்பல் திமுகவை இந்த தேர்தலில் விரட்டி அடிக்க வேண்டும். செய்வார்களா இந்துக்கள்?
தமிழகத்தை கொள்ளை அடித்து சொத்து சேர்த்த திமுக அழிய வேண்டும். அது மக்கள் கைகளில் தான் உள்ளது. தமிழக மக்கள் திருந்தி இந்த இந்து விரோத ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்.
ஒவ்வொரு தேமுதிக கேப்டன் ஓட்டும் உங்கள் பார்வையில் அரை சதவிகிதம் உம்மை தோற்கடிக்க போவது உறுதி
நமது விருப்பம் தனி. மக்கள் தீர்ப்பு பற்றி எண்ணி பார்க்கவேண்டும். திமுக ஆட்சியை முடிவுக்கு வரவேண்டும் என்பது மேல் தட்டு மக்கள் ஆசை. ஆனால் சிரத்தையுடன் ஒட்டு போடுபவர்கள் கீழ் தட்டு மக்கள். அவர்கள் விருப்பம் தான் நிறை வேரும். சும்மா பூருடா வெல்லாம் செல்லுபடியாகாது. மேலும் பழனிசாமி கொள்ளையை அடித்து சேர்த்த பணத்தை ஒரு பைசா கூட செலவு செய்ய மாட்டார். ஆகியானால்
தீ மு கா வில் அமைச்சராகா இருந்தவர்கள் கட்சியின் மூலம் பணம் பார்த்தவர்கள் செலவு செய்கிறார்கள் இது கீழ் தட்டு மக்களை சென்றடையும். பணம் சேர்க்க ஒரு வழி தான் தேர்தலில். கட்சியை ஜெயிக்க வேணுனு ஆசையெல்லாம் இல்லை. தோற்றாலும் ஸ் டாலின் மூலம் பணம் கிடைக்கும். அப்ப்டியெ ஜோசப் விஜய் ஜெயித்தாலும் கைய்ய நீட்டி வாங்கி காட்டி கொடுக்கவும் தயங்க்காத நல் உள்ளம்.
தேர்தல் பரப்புரையின்போது வாக்காளர்கள் முன்பு சிரசாசனம் செய்து நின்றாலும் கிடைக்காது என்பது எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரிந்த விஷயம் தானே?
திமிர் தண்டி பேச்சு. அதற்கு தேர்தல் முடிவில் தெரியும். அதுய்த்த காட்சிய பற்றி குறைத்து மதியுஈடு செய்பவர் மண்னை கவ்வுவார்.மேலும்
-
தமிழகம் வெல்லும்: ஓட்டளித்தபின் முதல்வர் ஸ்டாலின் பேட்டி
-
சாக்லேட் கொடுத்து வாக்காளர்களை வரவேற்ற ரோபோ; தமிழக தேர்தல் ஸ்பெஷல்
-
தமிழகத்தில் வெயில் 3 டிகிரி அதிகரிக்கும்
-
ஓட்டு இயந்திரம் பழுது; துவங்கிய சில நிமிடங்களிலேயே ஓட்டுப்பதிவு நிறுத்தம்
-
மதுரையில் 7 பேர் கொல்லப்பட்ட வழக்கு 9 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை
-
நகை கடைகளுக்கு இன்று விடுமுறை