சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஆறு மணி நேரம் விஜய் 'ரோடு ஷோ'
சென்னை: திருவள்ளூர் மாவட்டம் மற்றும் சென்னைக்கு உட்பட்ட சட்டசபை தொகுதிகளில், த.வெ.க., தலைவர் விஜய், நேற்று 'ரோடு ஷோ' நடத்தி, ஓட்டு சேகரித்தார்.
தமிழக சட்டசபை தேர்தல், நாளை மறுநாள் நடைபெறும் நிலையில், த.வெ.க., வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக, அக்கட்சி தலைவர் விஜய், நேற்று சென்னை பனையூரில் உள்ள, தன் வீட்டில் இருந்து, சாலை மார்க்கமாக, திருவள்ளூர் சென்றார்.
திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அடுத்த பஞ்செட்டி சந்திப்பில் உள்ள சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், ஒரு கிலோ மீட்டர் துாரம் ரோடு ஷோ சென்றார். வண்டலுார் வெளிவட்ட சாலையில் உள்ள சுங்க சாவடி, செங்குன்றம் அருகே உள்ள சுங்க சாவடி உள்ளிட்டவற்றில் தொண்டர்கள் குவிந்ததால், குறித்த நேரத்தில் விஜய் வர முடியாமல் போனது.
கூட்டம் அதிகரித்ததால், தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மதியம் 2 மணிக்கு விஜய் சென்ற பிறகு, போக்குவரத்து தொடங்கியது. ரோடு ஷோ'வின் போது, புதிதாக திருமணமான ஜோடியை, தன் வாகனத்தில் ஏற்றி, விஜய் வாழ்த்தினார்.
நேற்று ஒரே நாளில், பொன்னேரி, மாதவரம், ஆர்.கே.நகர், கொளத்துார், வில்லிவாக்கம், அண்ணா நகர், விருகம்பாக்கம், தி.நகர் உள்ளிட்ட தொகுதிகளில், 'ரோடு ஷோ' நடத்தினார். ஆறு மணி நேரத்துக்கு மேலாக நடந்த, விஜயின் 'ரோடு ஷோ' பிரசாரத்தில், வழி நெடுக, த.வெ.க., தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிரசார வாகனத்தை சூழ்ந்து கொண்டு, கட்சி துண்டுகளையும், பூக்களையும் துாக்கி வீசினர். எந்த இடத்திலும் விஜய் பேசவில்லை. இதனால், பல மணி நேரம் காத்திருந்த, த.வெ.க.,வினர் ஏமாற்றம் அடைந்தனர். விஜய்க்காக, வெயிலில் நீண்ட நேரம் காத்திருந்த, 10க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர்.
@block_B@ தடுமாறிய விஜய்; முழங்கையில் அடி
விஜய் நேற்று நடத்திய, 'ரோடு ஷோ'வில், சென்னை விருகம்பாக்கம் பகுதியில், வாகனத்தில் இருந்தபடி தொண்டர்களை நோக்கி கையசைத்தார். பின், வாகனத்தினுள், கீழே இறங்கியபோது, தடுமாறி விழுந்தார். இதில், விஜயின் முழங்கையில் அடிபட்டது.
தொடர்ந்து, ரோடு ஷோ மேற்கொண்டபோது, தொண்டர் ஒருவர் முழு தர்பூசணியை, வாகனத்தை நோக்கி வீசினார். அந்த தர்பூசணி வாகனத்தின் மேல் விழுந்து சிதறியது; விஜய் மீதும் தெறித்தது. இதனால், டென்ஷனான விஜய், அந்த தொண்டரை கண்டித்தார்.block_B
தமிழக மக்களே தயவு செய்து சிந்தித்து வாக்களியுங்கள். உங்கள் மனசாட்சியை கேளுங்கள்.
- பெண்கள் பாதுகாப்பு இருக்குகிறதா
- போதை பொருட்களால் ஏற்படும் கற்பழிப்புகள் மற்றும் கொலைகள்
- அளவிற்க்கு அதிகமாக தலை விரித்தாடும் லஞ்சங்கள்
- வேலை இல்லாமல் தவிர்க்கும் பட்டதாரிகள்
- படிப்பிற்கு ஏற்ற சம்பளங்கள் இருக்கிறதா
- விண்ணை முட்டும் விலைவாசி உயர்வுகள்
- எங்கு பார்த்தாலும் ஒரே புகை மண்டலமாக இருக்கும் தூசிகள் நிறைந்த சாலைகள் மற்றும் கழிவு நீர் கலக்கும் குடி தண்ணீர்
ஒரு அடிப்படை வசதிகளை கூட செய்து தரமுடியாத இந்த DMK மற்றும் ADMK அரசாங்கள் நமக்கு தேவையா .
மாற்றம் தேவை . இந்த ஒரு முறை வாக்களியுங்கள் TVK விசில் சின்னத்திற்கு .மேலும்
-
போன் போட்டா வந்து சேருது பணம்!
-
தென் இந்தியாவில் தொகுதிகள் குறையாது: இறுதிகட்ட பிரசாரத்தில் சந்திரபாபு நாயுடு பேச்சு
-
தி.மு.க. ரூ.2,500; அ.தி.மு.க. ரூ.1,500: ஒரு ஓட்டுக்கு விலை
-
திருப்பூர் சாசனம் - 2026.. வாக்குறுதி அல்ல... வளர்ச்சியே இலக்கு
-
சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ ஜகத்குரு ஆதி சங்கராச்சாரியார் ஜெயந்தி விழா
-
அலுவலகத்தில் லட்சக்கணக்கான பணம் பறிமுதல்; காங் எம்பி கார்த்தி சமாளிப்பு