நகை கடைகளுக்கு இன்று விடுமுறை

சென்னை: தமிழகத்தில் சிறியது, பெரியது, நடுத்தரம் என, 35,000 தங்க நகைக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில், தினமும் சராசரியாக, 15,000 கிலோ தங்கம் விற்பனையாகிறது.

சட்டசபை தேர்தல் இன்று நடப்பதால், அனைத்து நகைக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் கூறுகையில், ''நகைக் கடைகளில் பணிபுரிவோர், தங்களின் ஜன நாயக கடமையான ஓட்டுப்பதிவை செலுத்த வேண்டும் என்பதற்காக, தங்க நகைக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது,'' என் றார்.

Advertisement