மாணவருக்கு பாராட்டு

உச்சிபுளி: உச்சிபுளி அருகே நாகாச்சியில் அமைந்துள்ள ராமகிருஷ்ண மடம் விவேகானந்தா வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில் 2025-26 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 17 மாணவர்கள் தேர்வு எழுதினர். முதலிடம் விஷ்வ ரூபிணி 465, 2ம் இடம் மதுசுதன் 461, 3ம் இடம் லயா 454, மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மாணவர்கள் 90 சதவீதத்திற்கும் மேலாக மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பள்ளி தாளாளர் சுவாமி சுதபானந்த மகராஜ், முதல்வர் மாரி கிருபா, ஆசிரியர்கள் வாழ்த்தினர்.----

Advertisement