ஆலோசகர்களுக்கு கிராக்கி குறையவில்லை
'ஏ .ஐ.,' தொழில்நுட்பம் நிதித்துறையில் வேகமாக வளர்ந்து வந்தாலும், நிதி ஆலோசனைகளை பெறுவதற்கு இன்றும் 80 சதவீத பணக்காரர்கள் நிதி ஆலோசகர்களையே நம்புவதாக 'மெக்கின்சி' அறிக்கை தெரிவித்துள்ளது.
அதில் தெரிவித்துள்ளதாவது:
வரி திட்டமிடல் போன்ற தொழில்நுட்ப வேலைகளை 'ஏ.ஐ.,' எளிதாக்கினாலும், முதலீடு சார்ந்த முக்கிய முடிவுகளில் நிதி ஆலோசகர்களின் ஆலோசனையையும், நம்பிக்கையையுமே பெரும் பணக்காரர்கள் எதிர்பார்க்கின்றனர். அதாவது, சாதாரண தகவல்களை திரட்ட 'ஏ.ஐ.,' உதவினாலும், ஒரு ஆலோசகராக சரியான வழிகாட்டுதலை வழங்க மனிதர்களின் பங்களிப்பே இன்றும் முதன்மையாக உள்ளது.
வருகிற 2034ம் ஆண்டிற்குள் நிதி ஆலோசகர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதால், அந்த பற்றாக்குறையை ஈடுசெய்யவே 'ஏ.ஐ.,' தொழில்நுட்பம் அதிகம் பயன்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement