பணம் பட்டுவாடா ரூ.10,500 பறிமுதல்

வெண்ணந்துார்:ராசிபுரம் சட்டசபை தொகுதி பறக்கும்படை அதிகாரி செங்கோடன் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வெண்ணந்துார் அருகே உள்ள செம்மாண்டப்பட்டி பகுதியில், பா.ஜ., சார்பில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக புகார் வந்தது. இதையடுத்து பறக்கும்படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.


அப்போது, இருவர் சந்தேகத்தின் பேரில் நடமாடுவதை கண்டு அவர்களை விசாரிக்க முயன்றனர். அப்போது, அவர்களிடம் இருந்த நோட்டீஸ், ஓட்டு லிஸ்ட் மற்றும் பணம், 10,500 ரூபாய் ஆகியவற்றை துாக்கி வீசிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். பறக்கும்படை அதிகாரி செங்கோடன் மற்றும் குழுவினர், 10,500 ரூபாயை பறிமுதல் செய்து, ராசிபுரம் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Advertisement