சித்திரை தேர் திருவிழா

ராசிபுரம்:ராசிபுரம் நகரில் பிரசித்தி பெற்ற தர்மசம்வர்த்தினி அம்பாள் சமேத கைலாசநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத திருத்தேர் பெருவிழா விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டிற்கான பிரம்மோற்சவ விழா, கடந்த, 20ல் கிராம சாந்தி பூஜையுடன் தொடங்கியது.


முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவம், 29 மாலை, 5:00 முதல், 7:00 மணிக்குள் அஸ்த நட்சத்திரத்தில் நடக்கிறது. திருத்தேர் வடம்பிடித்தல், 30ல் நடக்கிறது. அன்று காலை, 5:00 மணி முதல், 6:00 மணிக்குள் மகா அபிஷேகம் நடக்கிறது. காலை, 7:30 மணி அளவில் சுவாமி மற்றும் அம்பாள் அலங்கரிக்கப்பட்ட திருத்தேருக்கு எழுந்தருளுகின்றனர்.

Advertisement