காங்., - த.வெ.க.,வினர் பிரசாரத்தில் வாக்குவாதம்

ஆத்துார்: நாளை சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவை முன்னிட்டு, அதன் இறுதி கட்ட தேர்தல் பிரசாரம் நேற்று நடந்தது.

இதில் நரசிங்கபு-ரத்தில் இருந்து காங்., வேட்பாளர் அர்த்தனாரி, கூட்டணி கட்சி நிர்வாகிகளோடு ஊர்வலமாக சென்றார். அப்போது உடையார்பாளையத்தில், த.வெ.க., தேர்தல் அலுவ-லகம் உள்ள பகுதியில் இறுதி கட்ட பிரசாரத்தில் அக்கட்சியினர் ஈடுபட்டபோது, இரு தரப்பை சேர்ந்தவர்களும் கூச்சலிட்டனர். தொடர்ந்து வாக்குவாதம் செய்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், இருகட்சியினரையும்
சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

Advertisement