வெவ்வேறு விபத்தில் முதியவர் உட்பட இருவர் பலி

ஓசூர்: திருப்பத்துார் மாவட்டம், ஆண்டியப்பனுார் கிராமத்தை சேர்ந்-தவர் அபராஞ்சி, 83. இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:15 மணிக்கு, கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றார். ஆனந்த் எலக்ட்ரிக்கல் நிறுவனம் அருகே சென்-றபோது, அவ்வழியாக வந்த கார், அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பலியானார். ஹட்கோ போலீசார் விசாரிக்கின்றனர்.


கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அடுத்த கூடுமாகனப்-பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன், 51. கூலித்தொழி-லாளி. கடந்த, 19ம் தேதி மாலை, 4:30 மணிக்கு, சுசூகி ஆக்சஸ் ஸ்கூட்டரில், ராயக்கோட்டை - ஓசூர் சாலையிலுள்ள தொட்ட-மெட்டறை பகுதியில் சென்றார். அப்போது அவ்வழியாக வந்த மாருதி ஸ்விப்ட் கார், ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த நாராயணன், ஓசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நேற்று முன்-தினம் நள்ளிரவு உயிரிழந்தார். உத்தனப்பள்ளி போலீசார் விசாரிக்-கின்றனர்.

Advertisement