மழைநீர் வடிகால் வசதி செய்து தர கோரிக்கை

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூரில், 3.62 கோடி ரூபாய் மதிப்பில், நவீ-னப்படுத்தப்பட்ட பஸ் ஸ்டாண்டை கடந்த, 2024 அக்., 24ல் அமைச்சர் நேரு திறந்து வைத்தார்.


இந்நிலையில் சிறிதளவு மழை பெய்தால் கூட பஸ் ஸ்டாண்ட் முன்புறமுள்ள சாலையில், மழைநீர் வெளியேற வழியில்-லாமல் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிக்கு உள்ளாகி வரு-கின்றனர். எனவே, மழைநீர் வெளியேறும் வகையில், மழை நீர் வடிகால் அமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement