தமிழில் கும்பாபிஷேகம்: அறிக்கை அளிக்க அரசுக்கு உத்தரவு
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களின் கும்பாபிஷேக விழாக்களில், சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழ் இடம் பெற உத்தரவிட வேண்டும் என தாக்கலான வழக்கில், அறநிலையத்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
கரூர் மாவட்டம், தாந்தோணியைச் சேர்ந்த தமிழ் ராஜேந்திரன், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
பேரூர் ஆதீனம், குன்றக்குடி அடிகளார் போன்ற மடாதிபதிகளால், பல கோவில்களில் தமிழ் பக்தி மந்திரங்கள், தமிழ் பாடல்களை பயன்படுத்தி கும்பாபிஷேகம் நடத்தப் படுகிறது.
அனைத்து கோவில்களின் கும்பாபிஷேக நிகழ்வுகளிலும், தமிழ் மந்திரங்களை ஓதுவதற்காக தமிழ் சான்றோர்கள், ஓதுவார்களை அழைக்க வேண்டும்.
பல்வேறு வகையான கோவில்களில் பயன்படுத்தப்பட வேண்டிய தமிழ் மந்திரங்கள் குறித்த விபரங்களை பரிந்துரைக்க, ஏற்கனவே நிபுணர் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
அக்குழுவின் அறிக்கையை பெற்று, யாகசாலை, கருவறை, கோபுர விமானத்தில், சமஸ் கிருதத்திற்கு இணையாக தமிழ் ஆன்மிக மந்திரங்கள், தமிழ் பக்தி பாடல்கள் இடம் பெறுவதை நடைமுறைப்படுத்த வேண்டும்.
மேலும், 2026 செப்., 17ல், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இக்கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களின் கும்பாபிஷேக விழாக்களிலும், சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழ் இடம் பெற வலியுறுத்தி, தமிழக அறநிலையத்துறை முதன்மை செயலருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த மனுவை, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி விசாரித்தார். மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் சுரேஷ் ஆஜரானார்.
இதையடுத்து, ''இவ்வழக்கில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இணை கமிஷனர் மற்றும் செயல் அலுவலர், அறநிலையத்துறை மதுரை மண்டல இணை கமிஷனர் எதிர்மனுதாரர்களாக இணைத்துக் கொள்ளப்படுகின்றனர்.
''அவர்கள் மனு தாரர் கோரும் நிவாரணம் தொடர்பாக மேற்கொண்ட நடவடிக்கை குறித்து, ஜூன் 2ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,'' என நீதிபதி உத்தரவிட்டார்.
நியாயமான கோரிக்கை, நியாயமான தீர்ப்பு வழங்கப்படும்!
தமிழும் வேண்டாம் சம்க்ருதமும் வேண்டாம் பொதுவாக தெலுங்கில் கும்பாபிஷேகம் செய்யலாமே.குறைந்த பக்ஷம் மந்திரிகள் மற்றும் ஏம்மல்லேக்கள் சந்தோஷபடுவார்கள்
பக்திக்கு மொழி இல்லை. கண்ணப்பனார் தன வாயில் ஆற்று நீரை எடுத்து வந்து அபிஷேகம் செய்தார். ரத்தம் வழியும் கண்களை பார்த்து பதறி போய் தன கண்களையே பெயர்த்து இறைவனுக்கு பொருத்தினார். உண்மையான பக்தர்கள் இந்த மொழி லாவணியில் ஈடு படமாட்டார்கள். மௌனமே இறைவன் மொழி. உபதேசம். ஆன்மிகத்துக்கு துளியும் சம்பந்தப்படாதவர்கள் செய்யும் அட்டூழியம்.
அப்படியே மசூதியையும் தமிழில் மட்டும்தான் ஓத வேண்டும் என்று உயர் நீதி மன்றம் உத்தரவிட வேண்டும் ... ஜாதி ஜாதி என்றும் பிரிவினை என்றும் பேசிக்கொண்டு அதே சமயத்தில் மொழி பிரிவினையை பெரிய அளவிற்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறார்கள் ... இந்துக்கள் கலாச்சாரத்தை அழிக்க எடுக்கப்படும் முயற்சிகள் இவை எல்லாம் ....
புரியாத பாஷையில் சொன்னாத்தான் பூ சுற்ற முடியும்.எல்லா மதங்களும் இதே ஃபார்முலாவைத்தான் பின்பற்றுகின்றன.
அல்லோபதி மருத்துவம் முழுவதும் ஆங்கிலத்தில்தான் உள்ளது. மருத்துவர்களுக்கு புரியும் அனைத்து வார்த்தைகளும் நமக்கு புரியாது. எஞ்சினியரிங் பாடத்தில் உள்ள அனைத்துமே ஆங்கிலத்தில்தான் உள்ளது. அதுவும் நமக்கு புரியாது. அவற்றை தெரிந்துகொள்ளவேண்டுமானால் நாம் அதை பயிலவேண்டும். அதற்க்கு மாறாக இருமொழி கொள்கையில் தீவிர பெற்றுக்கொண்டு நாம் வேறு எந்த மொழியையும் கற்கப்போவதில்லை. அதனால் மேற்சொன்ன அனைத்தையும் எனக்கு தெரிந்த தமிழில் மொழிபெயர்க்கவேண்டும் என கூறுவது முறையா. புரியாத பாஷை என பரிகாசிப்பதைவிட தேவையான மொழிகளை நாம்தான் கற்றுக்கொள்ளவேண்டும். அதற்கு முயற்சிக்கலாம். யாரும் தடுக்க போவதில்லை.
உங்க தொழுகை தமில்லையா நடக்குது?
மசூதிகளில் தமிழில் பாங்கு சொல்ல யாராவது வழக்கு போடலாமே. எல்லாம் உருது, அரபியில் இருக்கிறதே.
இப்போதுள்ள மீனாக்ஷி அம்மன் ஆலயத்தைக் கட்டியது தெலுங்கரான திருமலை நாயக்கர்தான் என்பதால் தெலுங்குக்கும் சம உரிமை கொடுங்கள் சம இடம் கொடுங்கள் என்றால் எப்படி இருக்கும்?
ஆலய வழிபாட்டு முறைகளில் அரசு தலையிட உரிமையில்லை என சுப்ரீம் கோர்ட் இறுதியாகக் கூறிவிட்டது. கணக்கு வழக்குகளை மட்டுமே மேற்பார்வை செய்யும் உரிமையுண்டு என்பது சட்டம். சங்கம் வளர்த்த மதுரை என்பதால் மதுரை ஹைக்கோர்ட் அமர்வு முழுக்க தமிழுக்கு மாறவில்லையே.
மருத்துவம் பொறியியல் மற்றும் சட்டம் போன்ற துறைகளில் தமிழில் பாதிக்கப்படுகின்றததா? அவற்றை முதலில் தமிழில் கற்பிக்கவேண்டும் என யாரும் வழக்கு தொடுக்கவில்லை. தாய்மொழியில் கல்வி என மத்திய அரசு கூறினாலும் அதயும் எதிர்க்கின்றனர். ஆனால் தொன்றுதொட்டுவரும் ஹிந்து ஆலய வழிபாட்டுமுறைகளில்மட்டும் தமிழில் என வழக்குகள் தொடரப்படுகின்றன. நமது தொன்மையையும் கலாசாரத்தையும் பாதுகாக்கவேண்டும் என அடிக்கக்கூறும் அரசு மற்றும் நீதிமன்றங்களும் இந்த விஷயத்தில் முரண்பாடான கருத்துக்களைக்கொண்டிருக்கின்றன
வரதராஜன் சார்....என் கருத்தை பதிவிடலாம் என்று எண்ணியிருக்கையில் அதற்கு முன்பாக அனைவரின் கருத்தையும் படிப்போம் என்று படித்ததில் உங்களின் கருத்தில் ஒன்று கூட மாறாமல் அப்படியே என் கருத்தை பிரதிபலித்திருந்தது....விளம்பரத்திற்காக தொடுக்கப்படும் இத்தகைய வழக்குகளை ஆரம்ப நிலையிலே தள்ளுபடி செய்து வெகுவான அபராதத்தை விதித்திருக்க வேண்டும்....இப்படித்தான் டைம்ஸ் நௌ தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் ஒரு இஸ்லாமியர் எம்பெருமான் சிவனை குறித்து தெரிவித்த கருத்துக்கு எதிர் கருத்தாக பாஜகவின் செய்தி தொடர்பாளரான நூபுர் சர்மா கருத்து தெரிவித்தார் இதற்கு இஸ்லாமிய நாடுகளும், பாரத இஸ்லாமியரும் கன்டனம் தெரிவித்தனர் இதில் வேடிக்கை என்னவென்றால் நீதிமன்றமும் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக கன்டனம் தெரிவித்தது.....நபிகளை பற்றி கருத்து தெரிவித்ததற்கு இஸ்லாமிய நாடுகளும் இஸ்லாமியரும் ஒற்றுமையா குரல் கொடுத்ததால் ஆடி போன நீதிமன்றம் எம்பெருமான் சிவனை பற்றி பேசியதை எந்த இந்து அமைப்புகளும், இந்துக்களும் அவ்வளவு ஏன் நீதிமன்றமே கன்டனமோ எதிர்ப்போ தெரிவிக்க வில்லை அப்படி அழுத்தமாக நம் எதிர்ப்பை பதிவு செய்திருந்தால்....இப்படியான வழக்குகளை பதிவு செய்ய பயம் வந்திருக்கும்....தவிற இன்று பெரும் வாக்குவாதம் நடைபெற்று கொண்டிருக்கும் உச்ச நீதிமன்றத்தில் சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற வழக்கும் தொடுத்திருக்க முடியாது.....கோவில்களில் நிர்வாகிப்பதில் தவறு இருந்தால் நீதிமன்றம் தலையிடலாம் .... ஆனால் இறைவழிபாட்டு சட்ட திட்டங்களின் நீதிமன்றம் எப்படி தலையிட முடியும்.... இதை பற்றி ஒரு கட்டுரையே எழுதலாம் ஆனால் இங்கே கருத்தை மட்டுமே பதிவிட இடம் இருக்கிறது....!!!