வேட்பாளர்களின் பிரசாரம் ஓய்ந்தது

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளிலும், 15 நாட்களாக நடந்த பிரசாரம், நேற்று மாலையுடன் ஓய்ந்தது.

தமிழக சட்டசபை தேர் தலை முன்னிட்டு, நாளை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில், 10 சட்டசபை தொகுதிகளிலும், 171 பேர் போட்டியிடுகின்றனர்.

கடந்த 15 நாட்களாக, தொகுதி முழுதும் சுற்றி வந்து, அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

நாளை காலை, திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 4,016 ஓட்டுச்சாவடிகளிலும், காலை 7:00 - மாலை 6:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

Advertisement