அதிகாரிகள் இல்லாத மண்டல அலுவலகத்தில் த.வெ.க., போராட்டம்

திருவொற்றியூர்:பண பட்டுவாடாவை தடுக்கக்கோரி, திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு, தமிழக வெற்றி கழக வேட்பாளர், கட்சியினர் 50 க்கும் மேற்பட்டோர், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவொற்றியூர் தொகுதி, த.வெ.க., வேட்பாளர் செந்தில்குமார் நேற்று மதியம், திடீரென, கட்சியினர் 50 பேருடன், திருவொற்றியூர் மண்டல அலுவலகம் வந்தார்.

ஓட்டுக்கு, தி.மு.க.,வும், - அ.தி.மு.க., பண பட்டுவாடா செய்வதை, தேர்தல் அதிகாரிகள் தடுக்கவில்லை எனக்குற்றம் சாட்டி, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் நடத்தும் அதிகாரி அறை முன் அமர்ந்து, தர்ணா போராட்டம் நடத்தினர்.

ஓட்டுப்பதிவு இன்று நடக்கவுள்ள நிலையில், ஓட்டுப் பெட்டிகளை ஓட்டுச் சாவடிகளுக்கு அனுப்பும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தால், மண்டல அலுவலகத்தில் யாரும் இல்லை. த.வெ.க.,வினரை போலீசார் அவர்களை சமாதானம் செய்து, கலைந்து போக செய்தனர்.

Advertisement