ஓட்டுப்போட வந்த 3 பேர் பலி; ஓசூர் அருகே கோர விபத்து
ஓசூர்: ஓசூர் அருகே கார் மற்றும் ஆம்னி பஸ் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
கிருஷ்ணிகிரி
மாவட்டம் ஓசூர் அருகே, பெங்களூரில் இருந்து பொன்னகரம் நோக்கி வந்த காரும்,
உளுந்தூர்பேட்டையில் இருந்து பெங்களூர் சென்றுகொண்டிருந்த ஆம்னி பஸ்சும்
நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த
தர்மபுரி மாவட்டம் சிகரள அள்ளி கிராமத்தை சேர்ந்த வீரமணி, பிரதாப் மற்றும்
மாரி ஆகிய 3 பேர் உயிரிழந்தனர்.
இவர்கள் நாளை ஓட்டு போடுவதற்காக காரில் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்த போது விபத்து நிகழ்ந்துள்ளது. மேலும் சதீஷ்குமார் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து அதிகாலை நேரத்தில் நிகழ்ந்துள்ளது.
நள்ளிரவு நேரம் , அதிகாலையில் வாகன பயணத்தை தவிர்ப்பது நல்லது. வாகனம் ஓட்டுபவர் , தூக்க கலக்கத்தில் சற்று அசந்தாலும் பெரும் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் . இந்த விபத்து அதிகாலை நேரத்தில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
வாசகர் கருத்து (3)
Yaro Oruvan - Dubai,இந்தியா
22 ஏப்,2026 - 15:46 Report Abuse
5 ஸ்டார் இல்ல 10 ஸ்டார் வண்டின்னாலும் ஒட்டுறவன் ஒழுங்கா ஓட்டணும்.. வண்டி ஸ்டார் பாதுகாப்பு முக்கியம்தான்.. அதுக்குன்னு போயி சொருவுனா வண்டி என்ன செய்யும் ? 0
0
Reply
ديفيد رافائيل - کویمبٹور,இந்தியா
22 ஏப்,2026 - 15:24 Report Abuse
Over speed போனா இப்படி தான் சாகனும் 0
0
Reply
KR india - ,இந்தியா
22 ஏப்,2026 - 11:47 Report Abuse
படத்தில் காணப்படும் கார், இந்தியாவில் சிறந்த நிறுவனம் என்ற பேரெடுத்த, இரண்டெழுத்து கார் கம்பெனியின் 5 எழுத்துக் கார், NCAP மற்றும் GNCAP தரப்பரிசோதனையில், 5 ஸ்டார் மதிப்பெண் பெற்று, பாதுகாப்பான கார் என்ற நற்பெயர் எடுத்திருந்தது. நானும் கூட, இந்த கார் வாங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்ததுண்டு. என்னதான், 5 ஸ்டார் பாதுகாப்புடைய கார் என்றாலும், அதிகாலை நேரப்பயணத்தை தவிர்ப்பதே நல்லது. ஏனெனில், பல்வேறு, விபத்துக்கள், அதிகாலை நேரத்தில் நடப்பதை கவனிக்க வேண்டும். தொலைதூர, இரவுப்பயணங்களில், கார் மற்றும் பஸ்-ஐ காட்டிலும், ரயில் பயணம் பாதுகாப்பானது. ஓசூர் மட்டுமல்ல, மதுரை to திண்டுக்கல்-திருச்சி நெடுஞ்சாலை போன்று எங்கெல்லாம், அடிக்கடி விபத்து நடக்கிறதோ, அங்கு சென்று ஆய்வு செய்து, அதற்கு காரணம், 1. எச்சரிக்கை பலகை இல்லாமல், தீடிரென்று முளைத்துள்ள வேகத்தடையா ? 2.மேம்பால இறக்கத்தின் மிக அருகில் இருக்கும் பாத சாரிகள் நடைமேடையா ? அல்லது 3. ரோட்டில் ஏற்பட்ட திடீர் பள்ளமா ? அல்லது 4. ஒரு சில இடங்களில் மட்டும், மிகவும் பழுதடைந்த ரோடா ? அல்லது 5. பழுதடைந்து நடுரோட்டில் நின்றுகொண்டிருந்த வாகனமா ? என்பதை எல்லாம், நெடுஞ்சாலை துறையினர், அவ்வப்பொழுது ஆய்வு செய்து, அதை சரி செய்ய வேண்டும். மட்டுமல்லாது, போலீஸ் ரோந்து வாகனம் செல்லும் காவல்துறையினர் கூட, பழுதடைந்த ரோட்டின் நிலைமையை நெடுஞ்சாலை துறையினருக்கு, தகவல் தெரிவிக்கவேண்டும். பலியானவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் ஓம் சாந்தி 0
0
Reply
மேலும்
-
ராகுல் பிரசாரம் மொழிபெயர்ப்பு குழப்பம்; பின்னணியில் இருப்பது நிவேதித் ஆல்வா
-
சர்க்கரை ஆலைகளுக்கு புதிய சட்டம்: மே 20 வரை கருத்து தெரிவிக்கலாம்
-
இ.வி.எம்., உள்ளிட்ட இயந்திரங்கள் பயணம் துப்பாக்கி போலீஸ் கட்டுப்பாட்டில் மையங்கள்
-
தேர்தலுக்காக 3 நாள் டாஸ்மாக் விடுமுறை கடந்த 20ல் ரூ.13 கோடிக்கு மது விற்பனை
-
கொங்கு கலை அறிவியல் கல்லுாரியில் உயர்கல்வி வேலைவாய்ப்பு நிகழ்ச்சி
-
டில்லியில் சென்னை ஐ.ஐ.டி., தொழில்நுட்ப மாநாடு
Advertisement
Advertisement