கோவை தெற்கில் தேர்தலை நிறுத்தக்கோரி அதிமுக வேட்பாளர் தர்ணா; கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
கோவை: கோவை தெற்கு தொகுதியில் தேர்தலை நிறுத்த வேண்டும் என அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
கோவை மாவட்டத்தில் தி.மு.க., போட்டியிடும் தொகுதிகளில், ஒரு வாக்காளருக்கு ரூ.2,000 வீதமும், கூட்டணி கட்சியினர் போட்டியிடும் தொகுதிகளில் ரூ.1,500 வீதமும் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது என குற்றச்சாட்டு எழுந்தது.
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி போட்டியிடும் தெற்கு தொகுதியில், ஒரு ஓட்டுக்கு ரூ.5,000 வீதம் வழங்கப்படுவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். தி.மு.க.,வினரும், கரூரை சேர்ந்தவர்களும் ஓட்டுக்கு பணம் வழங்கி வருவதாக, மாவட்ட தேர்தல் அதிகாரியிடம், அ.தி.மு.க., வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் புகார் அளித்து இருந்தார்.
இந்நிலையில் இன்று (ஏப்ரல் 22) கோவை கலெக்டர் அலுவலகத்தில் கோவை தெற்கு தொகுதியில் தேர்தலை நிறுத்த வேண்டும் என அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவர், ''கோவை தெற்கு தொகுதியில் பணம் பட்டுவாடா நடக்கிறது, தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தோம்.
இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, தேர்தல் அதிகாரி மெத்தன போக்குடன் செயல்படுகிறார்'' என குற்றம் சாட்டியுள்ளார். போலீசார் சமரச பேச்சு நடத்தியும், தர்ணா போராட்டத்தை கைவிட அம்மன் அர்ஜூனன் மறுப்பு தெரிவித்தார்.
நாளை தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், அதிமுக வேட்பாளர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.
அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜூனன் மற்றும் கட்சியினர் தர்ணா போராட்டம் வீடியோ பார்க்க கிளிக் செய்யவும்
வாசகர் கருத்து (40)
வல்லவன் - ,
22 ஏப்,2026 - 21:59 Report Abuse
செந்தில் பாலாஜினாலே அதிரடிதான் 0
0
Reply
jss - ,
22 ஏப்,2026 - 18:32 Report Abuse
தமிழகம் தி்ருந்தாத நிலையை நோக்கி 1967 இல் இருந்தே சென்று விட்டது. திருடர்களும் ஊழல்வாதிகளும் ஆட்சியை கைப்பற்றும நிலை ஏற்ப்பட்டு விட்டது. இது normal நிலைக்கு வருவது இனி கடினம் ஏனெனில் மக்கள் இலவசத்திற்க்கும் ஊழலுக்கும் அங்கீகாரம் கொடுத்து விட்டனர். ஈசன் தமிழ்நாட்டை காப்பற்ற வேண்டுகிறேன் 0
0
Reply
Kannan - ,இந்தியா
22 ஏப்,2026 - 18:22 Report Abuse
இரண்டு கட்சிகளும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்கள். அங்கு தான் ஜெயிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் ஒரு ஓட்டுக்கு 5000 கொடுக்கிறார் நீங்கள் 1500 அல்லது 2000 கொடுக்கிறீர்கள். ஆக மொத்தம் இரண்டு கட்சிகளும் பணம் கொடுத்து மக்களை விலைக்கு வாங்குகிறீர்கள் இதற்கு எதற்கு தர்ணா செய்ய வேண்டும். தேர்தல் வந்தால் ஆளுகச்சியாக இருப்பவர்கள் அவர்கள் செய்த சாதனையை மக்களிடம் எடுத்து சொல்லி வருங்காலத்தில் வேறு என்னவெல்லாம் செய்யப் போகிறோம் என்று சொல்லி எங்களை தேர்ந்தெடுங்கள் என்று மக்களிடம் நிற்க வேண்டும். எதிர்க்கட்சிக்காரர்கள் ஐந்து வருடத்தில் நடந்த ஆளுங்கட்சிக்காரர்களின் குறைகளை மக்களிடம் எடுத்துரைத்து அவற்றை நாங்கள் வந்தால் களைவோம் நாங்கள் என்னவெல்லாம் செய்வோம் என்று மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் மக்கள் யாரை நிர்மாணிக்கிறார்களோ அவர்கள் ஆட்சி கட்டிலில் அமர முடியும். இந்த முறையா இப்பொழுது நடக்கிறது காசு கொடுத்து வெற்றி பெறுகிறார்கள் இது உண்மையான ஜனநாயகம் அல்ல எந்த கட்சி ஆட்சி அமைத்தாலும் அவர்கள் நான் மேலே சொன்ன நிபந்தனையை வைத்து அவர்கள் ஜெயிக்கவில்லை பணத்தை மட்டுமே கொடுத்து ஜெயித்தார்கள் இது உண்மையான வெற்றியும் அல்ல இது ஜனநாயகத்துக்கு விரோதமான வெற்றி. நெஞ்சு பொறுக்குதில்லையே என்ற பாரதியார் பாடல் வரிகள் தான் எனக்கு ஞாபகம் வருகிறது 0
0
Reply
DHURANDHAR - Nellai,இந்தியா
22 ஏப்,2026 - 17:20 Report Abuse
தேர்தலில் கமிஷன் என்பதே ஒரு கண் துடைப்பு. இந்தியாவில் உண்மையான ஜனநாயகத்துக்கு இனி வழி இல்லை. பணநாயகம் மக்களை வென்றுவிட்டது. 0
0
சுந்தரம் விஸ்வநாதன் - coimbatore,இந்தியா
22 ஏப்,2026 - 21:47Report Abuse
நாளை கூட தேர்தல் முடிந்ததும் இந்த தேர்தல் கமிஷன் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை சொல்லாது. ஏதோ ஒரு சதவீதத்தை சொல்லும். வாக்கு எண்ணிக்கையின் போது கட்சிகள் வாங்கிய வாக்கு எண்ணிக்கையை சொல்லும். ஆனால் அன்று சொல்லப்படும் வாக்குகள்தான் நாளை உண்மையிலேயே பதிவானதா என்று யாருக்குமே தெரியாது. 0.01% கூட சில ஆயிரம் வாக்குகளுக்கு சமம். 0
0
Reply
DHURANDHAR - Nellai,இந்தியா
22 ஏப்,2026 - 17:18 Report Abuse
எங்கள் தூ.டி தொகுதியில் திருட்டு திமுகவின் பண பட்டுவாடா பகிரங்கமாக ஜனநாயகத்துக்கே சவால் விடும் வகையில் பப்ளிக்காக திமுக கவுன்சிலர் அலுவலகத்தில் நடந்தது. மக்கள் அனைவரும் கூட்டம் கூட்டமாக வந்து வெட்கமே இல்லாமல் வாங்கி சென்றார்கள். வாங்கிய பணத்தை வெளியே வந்து அனைவர் முன்னிலையிலும் எண்ணிப்பார்த்துக்கொண்டார்கள்... 0
0
Reply
Balamurugan - coimbatore,இந்தியா
22 ஏப்,2026 - 17:06 Report Abuse
அரசியல் கட்சிகளை தாண்டி ஒரு தனி நபரின் ஒழுகீனத்தை கண்டிப்பாக கருத்தில் கொள்ளவேண்டும்.
பல்வேறு குற்றங்கள் செய்துவிட்டு எதோ யோக்கியனை போல கோவையில் வந்து போட்டியிடுகிறார் என்றால் எவ்வளவு திமிரு இருக்கும். கொள்ளையடித்தாலும் சரி கொலை செய்தாலும் சரி இந்த கேடுகெட்ட மக்களை பணம் கொடுத்து சரிசெய்துவிடலாம் என்ற எண்ணம் கொண்ட செந்தில் பாலாஜி போன்றோரை மிக கேவலமாக தோற்கடித்து விரட்டி அடிக்க வேண்டும் 0
0
Reply
Ramesh - ,இந்தியா
22 ஏப்,2026 - 15:33 Report Abuse
Its true only, DMK gave steel big vessel 2 weeks back and Rs.2000/- per person last 3 days, neigbours who missed the amount are quarreling with local DMK agents to give them their share of Money. Tamilnadu people are pathetic, too corrupt, Seems because of their greed they will spoil their kids future. 0
0
Reply
Murugesan - Abu Dhabi,இந்தியா
22 ஏப்,2026 - 15:31 Report Abuse
தேர்தலை நடத்துகின்ற அனைவருமே அயொக்கியர்கள் 0
0
Reply
R.Kumaresan - T.Rajagopalanpatti,இந்தியா
22 ஏப்,2026 - 15:12 Report Abuse
தேர்தலை நிறுத்த வேண்டும் என்றால் தமிழ்நாடு முழுக்க தேர்தலை நிறுத்த வேண்டும் ஏனெனில் பெரும்பாலும் மக்கள் பணம் பெற்றுக்கொண்டுதான் தேர்தலில் ஓட்டளிக்கிறார்கள்... 0
0
Reply
Palanisamy Sekar - Jurong-West,இந்தியா
22 ஏப்,2026 - 15:00 Report Abuse
செந்தில் பாலாஜி போன்றோர் இந்த தேசத்தித்திற்கே அவமானம். எங்கே இருந்து இவ்ளோ பணம் வருகின்றது, எப்படி கொண்டுவர முடிகின்றது, யார் யார் விநியோகம் செய்கின்றார்கள் எனபதை கூடவா போலீசாரால் அல்லது தேர்தல் அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை. இது அரசுத்துறைக்கே பெருத்த அவமானம். இன்னும் பணத்தை வாங்கி ஓட்டுப்படுகின்ற ஜனங்கள் இருக்கும் வரை திரட்டு திராவிட மாடல்களுக்கு துணிச்சல் அதிகம் ஏற்படவே செய்யும். முறையான விசாரணையை செய்யாமல் தேர்தலை நடத்துவது என்பது தேர்தல் ஆணையத்துக்கே களங்கம். 0
0
Reply
மேலும் 29 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement