பத்து பேர் மீது வழக்கு
திருவாடானை: திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலத்தில் ஏப்ரல் 21 அன்று மாலை நாம் தமிழர் கட்சியை சேரந்தவர்கள் பிரசாரம் செய்தனர். போக்குவரத்தை போலீசார் முறைப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது கட்சியினருக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பிரேம்நாத் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து பறக்கும்படை அலுவலர் பத்மநாதன் புகாரில் திருவாடானை போலீசார் பிரேம்நாத் உட்பட 10 பேர் மீது வழக்கு பதிந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement