கடன் வாங்குவதில் தப்பில்லை; எல்லா நாடுகளும் வாங்குகிறது; சொல்கிறார் சிதம்பரம்
நமது நிருபர்
கடன் வாங்குவதில் தப்பில்லை. எல்லா நாடுகளும் கடன் வாங்குகிறது. தமிழகம் மட்டும் கடன் வாங்க வில்லை என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கண்டனூர் சிட்டாள் ஆச்சி பள்ளியில் முதல் ஆளாக ஜனநாயக கடமை ஆற்றிய பிறகு நிருபர்களிடம் சிதம்பரம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் ஒரு நிலையான அரசு வேண்டும். வளர்ச்சி வேண்டும். மக்கள் நலத்திட்டங்கள் வேண்டும். இந்த மூன்று எதிர்பார்ப்புகள் தான் எதிரொலிக்கிறது. இந்த மூன்றையும் அளித்த திமுக அரசு மீண்டும் அமையும். இன்னும் ஐந்து ஆண்டுகள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமையும் என்ற நம்பிக்கை உள்ளது.
வரக்கூடிய அரசுக்கு பட்ஜெட் போடுவதில் எந்த சிக்கலும் இருக்காது. அமைச்சர்கள் இருக்கிறார்கள். திறன் மிக்க அதிகாரிகள் இருக்கிறார்கள். வரவு செலவு கணக்கை போடும்போது சொந்த வருவாய் மத்திய அரசின் வருவாய் இரண்டையும் கணக்கில் எடுத்து தேவையான வரவு செலவு கணக்கு போட வேண்டும். இது மத்திய அரசுக்கும் பொருந்தும். மாநில அரசுக்கும் பொருந்தும். நிலையான அரசு, வலிமையான அரசு உறுதியாக வரவு செலவு அழிக்கும். மத்திய அரசுக்கு எவ்வளவு கடன் உள்ளது.
கடன் வாங்குவதில் தப்பில்லை; எல்லா நாடுகளும் கடன் வாங்குகிறது. தமிழகம் மட்டும் கடன் வாங்கவில்லை. சர்வீஸ் லோன் அதுதான் கணக்கு. இலவசம் என்பதை நான் மறுக்கிறேன். இலவசம் அல்ல பலமுறை சொல்லி இருக்கிறேன். யுனிவர்சல் பேசிக் இன்கம் தமிழகம் முழுவதும் அடிப்படை வருமானம், எல்லோருக்கும் இருக்க வேண்டும் என்று திருப்பி திருப்பி தருகிறார்கள். குறைந்தபட்ச வருமானம் எல்லோருக்கும் வருகிறது என்று பார்க்க வேண்டும். இலவசமாக பார்க்க கூடாது. இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.
கடனை வாங்கி கொள்ளையடித்துவிட்டு மக்களின் தலையில் கடனை சுமத்துவது தானே உனது கூட்டணி கட்சிகளின் கொள்கை
மத்திய அரசு வாங்கும் கடன் நாட்டை முன்னேற்ற திராவிட மாடல் அரசு வாங்கும் கடன் அவர்களுடைய குடுப்பதையும் கட்சியை வளப்படுத்தவும் மட்டுமே. புரியும்படி சொன்னால் திட்டம் போட்டு திருடுவது.
இவரை ஏன் இன்னும் சிறையிலடைக்காமல் விட்டு வைத்திருக்கிறார்கள்? தொல்லை தாங்கமுடியல்ல
shame of T.N. Politics
படித்த படிப்பை சுய லாபத்திற்கு நம் நாட்டிற்கு எதிராகவும் ராகுலு ரேஞ்சிற்கு கீழ் இறங்கி போக கூடியவர். திகார் சிறையிலிருந்து பரோலில் வந்துள்ளார். கோர்ட் திரும்ப எப்போது சிறைக்கு திரும்பு மாரும் கூறலாம்.
இந்த ஜென்மங்களின் இறுதிக்காலம் மற்றவர்களுக்கு ஓர் பாடமாக அமையட்டும்.
முட்டுக் கொடுக்க முடிவெடுத்து விட்டால் எப்படி வேண்டுமானாலும் கொடுக்கலாம்....... அதிலும் இவரெல்லாம் கடைந்தெடுத்த ஏமாற்றுக்காரர்......கடன் வாங்குவது இன்ஃபராஸ்டரக்டர் டெவலப்மென்ட்டுக்காக வாங்குவதும் சம்பளம் கொடுக்க பணமில்லை என்று கடன் வாங்குவதும் ஒன்றா?
நம்ம ரூபாய அச்சடிக்கிற மெஷினை பாகிஸ்தானுக்கு விக்கிறதுதான் தவறு
எல்லா நாடுகளும் கடன் வாங்குகிறது சந்தேகமே இல்லை. வாங்கிய கடனை திரும்பி கொடுக்க வேறு ஒருவரிடம் கடன் வாங்குவது தனி மனிதனது பொருளாதார வளர்ச்சிக்கும் நல்லதில்லை நாட்டு பொருளாதாரத்திற்கும் நல்லதில்லை. எந்த நாடு இதை செய்கிறதோ அந்த நாடு விரைவில் திவாலாகும் என்பது பொருளாதாரத படிப்பின் அடிப்படை கூற்று
டிஜிட்டல் பெமென்ட் அப்டின்னா என்னென்னு தெரியாத கேள்வி கேட்ட ஆளுதான் நீங்க. கேட்டா பெரிய பொருளாதார மேதைன்னு வெளியே பீற்றி கொள்வது.மேலும்
-
ஓட்டுப்பதிவு வீடியோ வெளியிட்ட தவெக ஆதரவாளர் கைது
-
தமிழக தேர்தல் காலை 11 மணி நிலவரம்; மாவட்ட வாரியாக பதிவான ஓட்டுக்கள் சதவீதம்
-
மேற்குவங்க முதற்கட்டத் தேர்தல்; 11 மணி நிலவரப்படி 41.11% ஓட்டுகள் பதிவு
-
ஆணையம் சொல்வது ஒன்று; அதிகாரிகள் செய்வது இன்னொன்று; குளறுபடியால் அம்பலமாகும் ஓட்டு!
-
கடந்த தேர்தலில் 11 மணிக்கு 27.69 சதவீதம் ஓட்டுப்பதிவு; இந்த தேர்தலில் 37.56 சதவீதம்
-
விஜயும் என்னைப்போல தான்; ஓட்டு போட்ட பிறகு அண்ணாமலை சொன்ன விஷயம்