மேற்குவங்க முதற்கட்டத் தேர்தல்; மாலை 5 மணி நிலவரப்படி 89.93 % ஓட்டுகள் பதிவு
கோல்கட்டா: 294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில் முதற்கட்ட ஓட்டுப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் ஆர்வமாக ஓட்டளித்து வருகின்றனர். மாலை5 மணி நிலவரப்படி 89.93 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளன.
மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் கட்சி ஆளும் மேற்கு வங்கத்திற்கும் இன்று முதற்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. 294 தொகுதிகளைக் கொண்ட இந்த மாநிலத்திற்கு 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. திரிணமுல் காங்கிரஸ் - பாஜ இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
முதற்கட்டமாக 16 மாவட்டங்களில் உள்ள 152 தொகுதிகளுக்கு இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது. எஞ்சிய தொகுதிகளுக்கு ஏப்ரல் 29ம் தேதி 2வது கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மேற்கு வங்கத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கி நடந்து வருகிறது. ஓட்டுப்பதிவு மாலை 6 மணிவரை நடைபெறும். இன்று நடந்து வரும் முதற்கட்ட தேர்தலில் 3.6 கோடி வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர்.
தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக 2.4 லட்சம் பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அதிகாலை முதலே வாக்காளர்கள் ஆர்வமாக வரிசையில் நின்று ஓட்டளித்து வருகின்றனர். மாலை 5 மணி நிலவரப்படி 89.93 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளன.
@block_Y@
வன்முறை
இதனிடையே, தேர்தலை சீர்குலைக்கும் விதமாக, நேற்றிரவு முர்ஷிதாபாத்தில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சிலர் காயமடைந்தனர். முன்னாள் திரிணமுல் காங்கிரஸ் நிர்வாகியும், ஆம் ஜனதா உனயன் கட்சி தலைவருமான ஹூமாயுன் கபீரின் ஆதரவாளர்கள் தான் இந்தத் தாக்குதலை நடத்தியதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த சூழலில், ஹூமாயுன் கபீர் பெட்ரோல் குண்டுவீசப்பட்ட இடத்திற்கு இன்று நேரில் வந்தார். அப்போது, திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இதனால், பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர் அவர்களை அங்கிருந்து வெளியேற்றினர்.
block_Y
@twitter@https://x.com/ANI/status/2047206372962599057twitter
35 ஆண்டு கால மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியை கடந்த 2011ம் ஆண்டு வீழ்த்தி ஆட்சிக்கு வந்த மம்தா, தொடர்ந்து 15 ஆண்டுகளாக ஆட்சியை தக்க வைத்து வருகிறார். கடந்த 2021ம் ஆண்டு நடந்த தேர்தலில் 215 இடங்களில் மம்தா கட்சி வென்றது. பாஜ 77 இடங்களைக் கைப்பற்றியது.
மேற்கு வங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியால், 89 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இந்த சூழலில் அங்கு முதல்முறையாக தேர்தல் நடைபெற்று வருகிறது.
ஊடுருவல்கார்களை விரட்டியடிக்க வேண்டும். சமீபத்தில் அண்டை நாடுகளில் பல நடந்த கொடுர படுகொலை நியாயம் கிடைக்க வேண்டும். அதற்கு ஆட்சி மாற்றம் ஒன்றே தீர்வு.
இவ்வளவு மக்கள் ஆர்வமுடன் வாக்களிக்க வருகிறார்கள் என்றால் கண்டிப்பாக ஆட்சி மாற்றம் வருகிறது என்றுதான் பொருள். வரட்டும். மக்கள் வாழ்வு சிறக்கட்டும்.
மேற்கு வங்கத்தில் எப்போதும் இல்லாத வகையில் மிகவும் பிரம்மாண்டமான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பிற்பகல் 1 மணி நிலவரப்படி 62.18% சதவீத வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. மாநிலம் முழுவதும், 2 அல்லது 3 சம்பவங்களைத் தவிர, இதுவரை பெரிய அளவிலான வன்முறைகள் எதுவும் பதிவாகவில்லை.
வாக்குப்பதிவுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு,பதவியில் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ககேந்திர நாத் மஹதோ, திரிணாமுல் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்து இருக்கிறார். இது அவருக்கு டிக்கெட் மறுக்கப்பட்டதால் அல்ல, மாறாக வாக்குப்பதிவு தொடங்கும் வேளையில் நடக்கிறது. இது மேற்குவங்க கள நிலவரம் மாறுவதற்கான அறிகுறியை காட்டுகிறது. எனவே தீதிக்கு ஆப்பு உறுதி!மேலும்
-
ஓட்டுச்சாவடிக்கு வந்து ஓட்டளித்த 103 வயது முதியவர், மூதாட்டி
-
திருப்போரூர் தொகுதியில் ஓட்டளித்த மக்கள்
-
வயலுாரில் இயந்திரம் பழுது :தாமதமாக ஓட்டுப்பதிவு
-
கிராமங்களில் ஆர்வமுடன் ஓட்டு போட்ட மக்கள்
-
ஓட்டுப்போட படகில் ஆபத்து பயணம் :தாங்கல்பெரும்புலம் கிராமத்தில் அவலம்
-
பூந்தமல்லி பசுமை ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு