கடந்த தேர்தலில் 6 மணிக்கு 73.61% ஓட்டுப்பதிவு; இந்த தேர்தலில் 84.29 சதவீதம்

15

நமது நிருபர்





எஸ்ஐஆர் பணிக்கு பிறகு நடக்கும் முதல் தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வரும் சூழலில், மாலை 6 மணி நிலவரப்படி, 84.29 சதவீதம் ஓட்டுப்பதிவாகி உள்ளது. கடந்த 2021ம் ஆண்டு தேர்தலில் மாலை 6மணி நிலவரப்படி 73.61% ஓட்டுகள் பதிவானது.


தமிழகத்தில், 2026 சட்டசபை தேர்தல் இன்று நடந்து வரும் நிலையில், எஸ்.ஐ.ஆர்., வாயிலாக, லட்சக்கணக்கான வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதே நேரம் மாநிலம் முழுக்க, 14 லட்சம் புதிய வாக்காளர்கள் இணைந்துள்ளனர்.


'நுாறு சதவீதம் ஓட்டுப்பதிவு என்பது தான், தேர்தல் கமிஷனின் இலக்காக உள்ள நிலையில், இம்முறை அந்த இலக்கை எட்டிப்பிடிக்க வேண்டும்' என்பதில், தேர்தல் கமிஷன் உறுதியாக இருக்கிறது. எனவே, தேர்தல் கமிஷன் முன்னெப்போதும் இல்லாத வகையில் பல புதுமையான முயற்சிகளை இம்முறை மேற்கொண்டது.


அதன்படி காலை முதலே மக்கள் ஆர்வமாக ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். காலை 9 மணி நிலவரப்படி, 17.69 சதவீதம் ஓட்டுப்பதிவாகி உள்ளது.

பிறகு காலை 11 மணி நிலவரப்படி ஓட்டுப்பதிவு 37.56 சதவீதமாக அதிகரித்தது.

பிறகு மதியம் 1 மணி நிலவரப்படி, ஓட்டுப்பதிவு சதவீதம் 56.81 சதவீதமாக அதிகரித்தது.

தொடர்ந்து மபிற்பகல் 3 மணி நிலவரப்படி ஓட்டு சதவீதம் 70 சதவீதமாக அதிகரித்தது.

மாலை 5 மணி நிலவரப்படி 82.24 சதவீதம் ஓட்டுப்பதிவாகி உள்ளது.

மாலை 6 மணி நிலவரப்படி 84.29 சதவீதம் ஓட்டுப்பதிவாகி உள்ளது.


கடந்த 2021ம் ஆண்டு தேர்தலில் மாலை 6 மணி நிலவரப்படி 73.61% ஓட்டுகள் பதிவாகி இருந்தது.


கடந்த தேர்தலை விட அதிகமான மக்கள் ஓட்டளித்து வருவதால் அதிகமான ஓட்டுக்கள் பதிவாகும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துளளது. எஸ்.ஐ.ஆர்.க்கு பின், சட்டசபை தேர்தல் நடக்கும் நிலையில், ஓட்டு சதவீதம் கணிசமாக அதிகரிக்க வேண்டும் என்பதில் தேர்தல் கமிஷன் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement