வயலுாரில் இயந்திரம் பழுது :தாமதமாக ஓட்டுப்பதிவு

வயலுார்: வயலுார் ஊராட்சியில் ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுதடைந்ததால், 45 நிமிடங்கள் காலதாமதமாக வாக்காளர்கள் ஓட்டளித்தனர்.

திருவள்ளூர் சட்டசபை தொகுதி கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது வயலுார் ஊராட்சி. இங்குள்ள ஊராட்சி நடுநிலைப் பள்ளியில், இயந்திரம் பழுது ஏற்பட்டதால் ஓட்டளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. பின், 45 நிமிடங்கள் கழித்து மாற்று ஓட்டுப்பதிவு இயந்திரம் மூலம் ஓட்டுப்பதிவு துவங்கியது.

இதனால், அதிர்ச்சியடைந்த வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Advertisement