தி.மு.க.,வினர் கொடூர தாக்குதல்; பா.ம.க., அன்புமணி கண்டனம்
சென்னை: ரிஷிவந்தியம் தொகுதியில் பா.ம.க.,வுக்கு ஓட்டளித்தவர்கள் மீது, தி.மு.க.,வினர் கொடூர தாக்குதல் நடத்தியதாக, பா.ம.க., தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியில், கொனகள்ளவாடி கிராமத்தில் அமைக்கப்பட்ட 308, 309 ஆகிய ஓட்டுச்சாவடிகளில் மாம்பழம் சின்னத்திற்கு ஓட்டளித்தவர்கள் மீது, தி.மு.க.,வைச் சேர்ந்த குண்டர்கள் கொடூரத் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
அதேபோல், பாசார் கிராமத்தில் 161வது ஓட்டுச்சாவடியில், அ.தி.மு.க., கிளைச் செயலர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தோல்வியாளர்களின் கடைசி ஆயுதம் வன்முறை தான் என்பர். அதை போலவே சட்டசபை தேர்தலில் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாத தி.மு.க.,வினர், கடைசி நேரத்தில் வன்முறையை கட்டவிழ்த்து விட்டிருப்பதை அனுமதிக்க முடியாது.
பா.ம.க.,வுக்கு ஓட்டளித்த மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீதும், அவர்களை ஏவி விட்ட தி.மு.க., வேட்பாளர் வசந்தம் கார்த்திகேயன் மீதும் காவல்துறை வழக்குப்பதிவு செய்து, கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.
மேலும்
-
திரிணமுல் காங்கிரசின் அராஜக ஆட்சி; மம்தா அரசுக்கு ராகுல் கண்டிப்பு
-
2024 லோக்சபா தேர்தலை விட இம்முறை கூடுதலாக 50 லட்சம் பேர் ஓட்டளிப்பு
-
கொலம்பியாவில் பஸ்சில் குண்டுவெடிப்பு: 7 பேர் பலி; 20 பேர் காயம்
-
கொடைக்கானலில் முதல்வர் ஸ்டாலின் நடைபயிற்சி; ஆர்வத்துடன் செல்பி எடுத்துக்கொண்ட மக்கள்
-
உயிரியல் பூங்கா விலங்குகளை வெயிலில் இருந்து காக்க ஏற்பாடு
-
கணவர் சாவில் சந்தேகம்: விசாரிக்க மனைவி புகார்