வங்கதேசம் மரத்தில் சடலமாக தொங்கிய ஹிந்து கோவில் காவலாளி

டாக்கா: வங்கதேசத்தில் கடந்த சில நாட்களாக மாயமான ஹிந்து கோவில் காவலாளி ஒருவர், வனப்பகுதியில் உள்ள மரத்தில் சடலமாகத் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

நம் அண்டை நாடான வங்கதேசத்தின் காக்ஸ் பஜார் பகுதியில் உள்ள 'புலிஷோரா கோனா நாக பஞ்சமி' கோவிலில் காவலாளியாகப் பணியாற்றி வந்தவர் நயன் தாஸ், 35. கடந்த 19ம் தேதி, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் நயன் தாஸ் வீட்டிற்கு வந்து அவரை அழைத்துச் சென்றுள்ளனர்.

அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. போலீசார் மற்றும் உள்ளூர் மக்கள் தேடி வந்த நிலையில் மரத்தில் சடலமாகத் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவரது உடல் அழுகிய நிலையில் இருந்ததால், அவர் கடத்தப்பட்ட அன்றே கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

Advertisement