விவசாயி மீது தாக்குதல்



கெலமங்கலம்: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அடுத்த போடிச்சிப்பள்ளி அருகே டி.கொத்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ், 39, விவசாயி. நேற்று முன்தினம் அதிகாலை, 4:30 மணிக்கு, சி.தம்மண்டரப்பள்ளியில் உள்ள தன் நிலத்தில், ரோஜா தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார்.

அப்போது, நிலத்திற்குள் அத்-துமீறி நுழைந்த அடையாளம் தெரியாத ஒருவர், சுரேஷை தலையில் கட்டையால் அடித்து விட்டு தப்பினார். இதில் படுகாயமடைந்த அவர், ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல்சி-கிச்சைக்காக, தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சுரேஷை தாக்கியது யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரி-யவில்லை. முன்விரோதம் காரணமாக தாக்கப்-பட்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என, கெலமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement