கடை அருகே காயங்களுடன் இறந்து கிடந்த தொழிலாளி

மேடவாக்கம்: ஜல்லடியன்பேட்டை, பச்சையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கருப்பையா, 77. இவர், மேடவாக்கத்தில் உள்ள பூக்கடைகளில், பூ கட்டும் வேலை செய்து வந்தார்.

இரு மாதங்களாக, மேடவாக்கம்- - மாம்பாக்கம் பிரதான சாலை சந்திப்பில் உள்ள, பூ கடையில் வேலைக்கு பார்த்தபடி, அங்கேயே தங்கி வந்துள்ளார்.

நேற்று காலை 9:30 மணியளவில் கடை உரிமையாளர் மனோகரன், கடையை திறந்தபோது, உடலில் ரத்த காயங்களுடன் கருப்பையா இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

தகவலறிந்து வந்த மேடவாக்கம் போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

Advertisement