கோயில் திருவிழா:அசைவ அன்னதானம்

மேலுார்: மேலுார் அருகே கட்டகாளைபட்டி முனியாண்டி கோயில் திருவிழா துவங்கியது. முதல் நாள் நேர்த்திக்கடன் வேண்டி கிடைக்கப்பெற்றவர்கள் நுாற்றுக்கும் மேற்பட்ட ஆடுகளை காணிக்கையாக செலுத்தினர்.

ஆடுகள் இரவு பலியிடப்பட்டு ( ஏப். 26) காலை முதல் அசைவ அன்னதானம் வழங்கப்படும். இதில் மலம்பட்டி, வெள்ளலுார் நாடு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமத்தினர் கலந்து கொள்வர்.

Advertisement