பெண் மீது பைக்கில் மோதிய வாலிபரை தாக்கிய 3 பேர் கைது

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே நடந்து சென்ற பெண் மீது பைக்கில் மோதிய நபரை தாக்கிய மூவரை போலீசார் கைது செய்து, 10 பேரை தேடி வருகின்றனர்.

மூங்கில்துறைப்பட்டு அடுத்த வடமாமந்துார் கிராமத்தை சேர்ந்த காமராஜ் மகன் வைரமுத்து, 22; இவர் நேற்று அரும்புராம்பட்டில் நடந்த கோவில் திருவிழாவை பார்த்துவிட்டு பைக்கில் செல்லும்போது வசந்தா என்பவர் மீது மோதியுள்ளார்.

இதனை அறிந்த வசந்தா மருமகன் தட்சணாமூர்த்தி, உறவினர்கள் சம்பத், ராஜாமணி, சக்கரவர்த்தி, விஜி மற்றும் அடையாளம் தெரியாத நான்கு பேர் ஆகியோர் சேர்ந்து வைரமுத்துவை அடித்து கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து வைரமுத்து கொடுத்த புகாரின் பேரில் மூங்கில்துறைப்பட்டு போலீசார் தட்சிணாமூர்த்தி, 40; சக்கரவர்த்தி, 60; விஜி, 30; ஆகிய மூன்று பேரை கைது செய்து 10க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement