வேன் கவிழ்ந்து விபத்து ;சுற்றுலா பயணிகள் 15 பேர் காயம்

கூடலூர்: கும்பகோணத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 20 பேர், இன்று, காலை சுற்றுலா வாகனத்தில் ஊட்டி வந்து, அங்கிருந்து ஊட்டி தேசிய நெடுஞ்சாலை வழியாக முதுமலை புலிகள் காப்பகம் நோக்கி சென்றனர்.

ஊசிமலை அருகே, மதியம் 2:00 மணிக்கு வேன் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 15 பேர் காயமடைந்தனர். அனைவரும் சிகிச்சைக்காக கூடலூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நடுவட்டம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement