முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

திண்டுக்கல்:திண்டுக்கல் பிள்ளையார்நத்தம் அம்மன் கல்வியியல் கல்லுாரியில் படித்த முன்னாள் ஆசிரிய மாணவர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

கல்வி குழும தாளாளர் உமாவதி கண்ணன் தலைமை வகித்தார். முதல்வர் கெஜலட்சுமி, முன்னாள் முதல்வர் நாகராஜன், முன்னாள் பேராசிரியர் இன்பராஜ், தற்போது பணிபுரியும் பேராசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர்.

படித்த காலத்தில் நடந்த சுவையான சம்பவங்கள், அனுபவங்களை பகிர்ந்தனர். விளையாட்டு போட்டிகள் நடந்தது. கல்லுாரி சார்பில் அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

Advertisement