திருக்கல்யாண உற்சவத்தில்திரளான பக்தர்கள் தரிசனம்
சேலம்: சேலம், அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் எம்பெருமானார் உற்சவம் மற்றும் சித்திரை பிரமோற்சவம் கடந்த, 15ல் தொடங்கி நடந்து வருகிறது. அதில் தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது. தொடர்ந்து நேற்று மாலை, 6:00 மணிக்கு மேல், சவுந்தரராஜருக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
இதற்காக பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து பட்டாச்சாரியார்கள் வேத மந்திரம் சொல்லி, மாலை மாற்றும் வைபவத்தை நடத்தினர். பின் திருமாங்கல்ய பூஜை செய்து, பெருமாள் கரத்தில் தொட்டுக்
கொடுத்த மாங்கல்யத்தை, பட்டாச்சாரியார்கள், சுவாமி கழுத்தில் அணிவித்து கல்யாணத்தை நடத்தி வைத்தனர். திரளான பக்தர்கள், மணக்கோலத்தில் சவுந்தரராஜரை தரிசித்தனர்.
இன்று காலை, 11:00 மணிக்கு புனித நீர் நிரப்பப்பட்ட, 81 கலசங்கள் வைத்து சிறப்பு யாகவேள்வி நடத்தி, ஸ்தாபன திருமஞ்சனம், த்வாதச ஆராதனம் நடக்கிறது. இரவு சப்பரத்தில் சவுந்தரராஜர் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி, சப்தாவரண ஊர்வலம் நடக்கிறது. நாளை இரவு, 7:00 மணிக்கு பெருமாள் ஊஞ்சல் சேவை, வரும், 28 இரவு, எம்பெருமானார் ஊஞ்சல் சேவையுடன், 37ம் ஆண்டு பிரமோற்சவ விழா நிறைவு பெறும்.
மேலும்
-
'நாட்டின் கோதுமை உற்பத்தி நிலையாகவே உள்ளது'
-
பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு குறித்து விரைவில் பேச்சு
-
ரூ.8.18 லட்சம் கோடிக்கு அன்னிய நேரடி முதலீடு
-
ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு மத்திய அரசு புதிய விதிகள் வெளியீடு
-
தெரியாத கணக்கில் இருந்து பணம் வந்தால் ஆபத்தா?
-
மாயனுார் கதவணையில் மீன் விற்பனை மும்முரம்