ஏரியில் மூழ்கி பெண் சாவு

தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே மாரேகவுண்டன்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவர் மனைவி கவிதா, 21. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் மாடுகளை ஓட்டிக்கொண்டு, மல்லசந்திரம் கிராமத்திற்கு அருகில் உள்ள பேட்டராயன் ஏரி பகுதிக்கு கவிதா சென்றார்.


பின்னர் அங்குள்ள ஏரியில் துணி துவைத்துள்ளார். இதைதொடர்ந்து ஏரிக்குள் நீரில் மலர்ந்திருந்த பூக்களை பறிக்க முயன்றார். அப்போது நீரில் மூழ்கி பலியானார். தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement