ரவுடிக்கு வெட்டு 3 பேருக்கு வலை
மேட்டூர், மேட்டூர், கருமலைக்கூடல், சின்னகாவூர், கிழக்கு தெருவை சேர்ந்தவர் செந்தில், 42. இவரது பெயர், கருமலைக்கூடல் ஸ்டேஷனில் ரவுடி பட்டியலில் உள்ளது. நேற்று மதியம், 3:00 மணிக்கு அப்பகுதியில் உள்ள கல்குவாரி அருகே செந்தில், சின்னகாவூரை சேர்ந்த நண்பர்கள் கார்த்திக், 21, நோபல், 22, ஆகியோர் மது அருந்தினர்.
அப்போது கார்த்திக், நோபல் ஆகியோர், 'என் மாமன் அழகு தம்பிதுரையை எதிர்த்து பேசுவீயா' என கேட்டு, கத்தியால் செந்திலின் இடது கை மணிக்கட்டு, தோள்பட்டை, கண்புருவம் மீது வெட்டி விட்டு தலைமறைவாகினர். படுகாயம் அடைந்த செந்திலை, கருமலைக்கூடல் போலீசார் மீட்டு, மேட்டூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து கார்த்திக், நோபல், அழகுதம்பிதுரை ஆகியோரை தேடுகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நகர பகுதியில் தெரு நாய்கள் அதிகரிப்பு; பொதுமக்கள் அச்சம்
-
கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் ஆட்டோக்களால் டிராபிக் ஜாம்
-
தமிழ் சங்கங்களின் ஐம்பெரும் விழா
-
பெண் மீது பைக்கில் மோதிய வாலிபரை தாக்கிய 3 பேர் கைது
-
கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு ஜனன உற்சவ சிறப்பு பூஜை
-
கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் சேஷ வாகனத்தில் சுவாமி வீதியுலா
Advertisement
Advertisement