சாய் சுதர்சன் அபார ஆட்டம்: குஜராத் அணி வெற்றி
சென்னை: சென்னை அணிக்கு எதிரான பிரீமியர் லீக் டி-20 போட்டியில், குஜராத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சென்னை சிதம்பரம் மைதானத்தில் நடந்த சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. சென்னை அணியின் துவக்க வீரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் கேப்டன் ருதுராஜ் களமிறங்கினர். இருவரும் ரன் குவிக்க முடியாமல் தடுமாறினர். 3வது ஓவரில் ரபாடா வீசிய பந்தில் 11 ரன் எடுத்திருந்த சாம்சன் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து, வந்த உர்வில் படேலும் அதே ஓவரில் 4 ரன்னுக்கு அவுட்டானார்.
இதற்கு அடுத்த ஓவரில் இம்பேக்ட் வீரராக வந்த சர்பிராஷ் கான் ரன் ஏதுமின்றியும், பிரேவிஷ் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால், சென்னை அணி 37 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது. அதன்பிறகு வந்த துபே (22) ஓரளவுக்கு ரன் சேர்த்தார். விக்கெட்டுகள் ஒருபுறம் சரிந்தாலும், மறுமுனையில் கேப்டன் ருதுராஜ் மட்டும் நிதானமாக ஆடி ரன் குவித்தார். அவர் 49 பந்தில் அரைசதம் அடித்தார்.
கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ருத்துராஜ் 60 பந்துகளில் 74 ரன் குவித்தார். 20 ஓவர் முடிவில் சென்னை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 158 ரன் குவித்துள்ளது. குஜராத் தரப்பில் ரபாடா 3 விக்கெட்டும், அர்ஷத் கான் 2 விக்கெட்டும், சிராஜ், சுதர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
159 ரன் என்ற இலக்குடன் அடுத்து களமிறங்கிய குஜராத் அணியின் துவக்க ஆட்டக்காரர்களான கேப்டன் சுப்மன் கில், சாய் சுதர்சன் இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சுப்மன் கில் 33 ரன்களுக்கு நுார் அஹ்மத் பந்தில் அவுட் ஆனார்.
சாய் அரை சதம்
மறுபுறம் நிலைத்து நின்று விளையாடிய சாய் சுதர்சன் 33 பந்துகளில் அரை சதம் அடித்தார். அவருடன் இணைந்து விளையாடிய ஜோஸ் பட்லர் நிதானமாக ரன்கள் சேர்த்தார்.
நன்றாக விளையாடி சாய் சுதர்சன் 87 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஜோஸ் பட்லர் 39 ரன்களும் வாஷிங்டன் சுந்தர் 1 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இறுதியில் 16.4 ஓவரில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றிக்கு தேவையான 162 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது.
ருத்துராஜ் மோசமான சாதனை:
நடப்பு பிரீமியர் லீக் சீசனில் அதிகபந்துகளில் அரைசதம் அடித்த வீரர் என்ற மோசமான சாதனையை ருத்துராஜ் கெயிக்வாட் படைத்துள்ளார். முன்னதாக, லக்னோ அணி கேப்டன் பன்ட் 43 பந்துகளில் அரைசதம் அடித்திருந்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரலாற்றில் மந்தமான அரைசதம் அடித்தவர்களின் பட்டியலில் முரளி விஜய், டிவைன் ஸ்மித் ஆகியோருடன் 4வது இடத்தை ருத்துராஜ் கெயிக்வாட் பகிர்ந்து கொண்டார். முதல் 3 இடங்களில் பார்த்தீவ் படேல் (53), ஹைடன் (51), முரளி விஜய் (50) ஆகியோர் உள்ளனர்.
சென்னை அணியில் ஒரு நிரந்தர ஆட்டம் இல்லை. அதாவது தொடர்ந்து சிறப்பாக ஆடுவதில்லை. ஏதோ ஒரு ஆட்டத்தில் சிறப்பாக ஆடினால் போதாது. எல்லா போட்டிகளிலும் சிறப்பாக ஆடவேண்டும்.
இதை தான் வளர்த்த கடா மாரில் பாய்ந்தது என்பார்களோ சுதர்ஷன்?
நல்லது ரொம்ப நல்லது. சென்னை அணி ஜெயித்திருந்தால் குஜராத்தையும் வீழ்த்தியது சென்னை கிரிக்கெட்டில் கூட டெல்லி ஜெயிக்க கூடாது என்று பேசிய ஸ்டாலினுக்கு மீண்டும் பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது ரொம்பவும் நல்லதுமேலும்
-
ரூ.3 லட்சம் கோடியை கடந்தது 'ஜன் தன் யோஜனா' டிபாசிட்
-
என். எப் .ஓ., 'ஆக்சிஸ் மேக்ஸ் லைப்'
-
'எப் அண்டு ஓ' வர்த்தகம் செபி புதிய திட்டம்
-
நிழலா ? நிஜமா ? உங்கள் லாக்கர் பாதுகாப்பை உறுதி செய்வது எப்படி?
-
ராமநாதபுரம் பெரியகண்மாய் நீர்வரும் வழிகள் அகற்றத்தால் தண்ணீர் வருவதில் சிக்கல்
-
இதே நாளில் அன்று