'எப் அண்டு ஓ' வர்த்தகம் செபி புதிய திட்டம்
பங்கு சந்தையில் 'எப் அண்டு ஓ' பிரிவில் உள்ள பங்குகளின் விலையில் ஏற்படும் திடீர் ஏற்ற இறக்கங்களை கட்டுப்படுத்த, 'டைனமிக் பிரைஸ் பேண்டு' முறையை அனைத்து பங்குகளுக்கும் விரிவுபடுத்த செபி திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், சந்தையில் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் என்றும், இது தொடர்பாக, என்.எஸ்.இ., மற்றும் பி.எஸ்.இ., நிறுவனங்களுடன் இணைந்து செபி விரிவான வழிகாட்டுதல்களை விரைவில் வெளியிடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
நோக்கம் என்ன?
1 தற்போது குறிப்பிட்ட சில பங்குகளுக்கு மட்டுமே உள்ள இந்த முறையை இனி, 'எப் அண்டு ஓ' பிரிவில் உள்ள அனைத்து பங்குகளுக்கும் அமல்படுத்த திட்டம்
2 ஒரு பங்கின் விலை குறுகிய காலத்தில் அதீத ஏற்ற இறக்கத்தை சந்தித்தால், இந்த 'டைனமிக்' முறை அதன் வர்த்தகத்தை ஒரு எல்லைக்குள் கட்டுப்படுத்தும்
3 வெளிநாட்டு சந்தை மாற்றங்கள் அல்லது பெரிய ஆர்டர்களால் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை தடுத்து, சிறு முதலீட்டாளர்களை பாதுகாப்பதே இத்திட்டத்தின் நோக்கம்.
மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 சரிவு
-
மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்; தினமலர் நேரலை
-
கொடைக்கானல் ஏரி சாலையில் முதல்வர் ஸ்டாலின் சைக்கிள் சவாரி
-
ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் செல்லட்டும்; ஈரானுக்கு ஐநா வேண்டுகோள்
-
காலி பாட்டில் திரும்பப்பெறுவதில் சிரமம்; 'டாஸ்மாக்' ஊழியர்கள் போராட்டம்
-
'ஜனநாயகனுக்கு' மதுரை பாப்பாபட்டி கிராம மக்கள் எதிர்ப்பு; கறுப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டம்