கொடைக்கானலில் தொடர்கிறது முதல்வர் ஓய்வு: ஆர்வமுடன் சந்தித்த மக்கள்

3

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஓய்வுக்காக சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 27) காலை மனோரத்தினம் சோலை அணையில் நடைபயிற்சி மேற்கொண்டார். அவருடன் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.


தமிழக சட்டசபை தேர்தலையொட்டி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வர் ஸ்டாலின் ஓய்வெடுக்க மனைவி துர்காவுடன் ஏப்.,25ல் கொடைக்கானலுக்கு சென்று இருக்கிறார். அவர் அங்கும் தினமும் காலையில் நடைபயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

அந்தவகையில் இன்று காலை மனோரத்தினம் சோலை அணையில் நடைபயிற்சி மேற்கொண்டார். நடை பயிற்சியை முடித்து காரில் விடுதிக்கு திரும்பிய முதல்வர் ஸ்டாலின் பொதுமக்களிடம் உரையாடினார். முதல்வர் இன்று (ஏப்.,27) அங்குள்ள சில பொழுதுபோக்கு இடங்களை பார்வையிட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tamil News
Tamil News

Advertisement