இறுதிச்சடங்கு ஊர்வலத்தை முறைப்படுத்த சட்டம்; உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை: ''பாதுகாப்பு கருதி இறுதிச் சடங்கு ஊர்வலங்களை முறைப்படுத்துவதற்கான கட்டுப்பாட்டு மற்றும் தண்டனை விதிகளை உள்ளடக்கிய சட்டம் இயற்றுவதன் அவசியத்தை தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும்,'' என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை பெருங்குடி அருகே ஆலங்குளத்தில் மார்ச் 5 ல் மாணவிகளை அழைத்துக் கொண்டு ஒரு கல்லுாரி பஸ் சென்றது. அவ்வழியாகஒரு இறுதி ஊர்வலம் நடந்தது. இதில் பங்கேற்றவர்களில் சிலர் போதையில் இருந்தனர். பஸ்சை சட்டவிரோதமாக மறித்து, மாணவிகளை ஆபாசமாக திட்டி, ஹெல்மெட், காலணிகளால் டிரைவரை தாக்கினர். பஸ்சிற்கு சேதம் விளைவித்தனர். சங்கர் உள்ளிட்ட சிலர் மீது பெருங்குடி போலீசார் வழக்கு பதிந்தனர். சங்கர், அஜித்குமார், சந்திரபோஸ் உயர்நீதிமன்றக் கிளையில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்தனர்.
நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் பிறப்பித்த உத்தரவு: குற்றச்சாட்டுகள் தீவிரமானது. இச்செயல்களை சாதாரணமாக கருதிவிட இயலாது. இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பது சமூக, கலாசார நடைமுறையாக இருப்பினும், அது பொது பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிப்பதற்கோ அல்லது வன்முறையில் ஈடுபடுவதற்கோ எவ்வித உரிமையையும் வழங்குவதில்லை. மனுதாரர்களை காவலில் எடுத்து விசாரிப்பது அவசியம். முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இறுதி ஊர்வலங்களின்போது, குறிப்பாக பொது சாலைகளை மறிப்பது, மக்களுக்கு இடையூறு விளைவிப்பது அதிகரித்து வருகிறது. இறுதிச் சடங்குகளை நடத்தும் உரிமை இந்திய அரசியலமைப்பு பிரிவின் கீழ் வரும் 'வாழ்வுரிமையின்' ஒரு பகுதியாக அமைந்திருப்பினும், பொது ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு நலன் கருதி, அவ்வுரிமையானது நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டதாகும்.
டி.ஜி.பி.,சுற்றறிக்கை
இறுதி ஊர்வலங்களில் பங்கேற்போரின் ஒழுங்கின்மையால் பல விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்துள்ளன. அதில் உயிரிழப்புகளும் அடங்கும். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து பிறப்பித்த உத்தரவு அடிப்படையில் தமிழக டி.ஜி.பி.,2024 ல் சுற்றறிக்கை வெளியிட்டார்.
அதன்படி வாகன போக்குவரத்து மற்றும் இறுதி ஊர்வலத்தை ஒழுங்குபடுத்தும் பொருட்டு, இறந்தவரின் குடும்பத்தினர் இறுதி ஊர்வலம் நடைபெறும் உத்தேச நேரம், வழித்தடம் குறித்து முன்கூட்டியே சம்பந்தப்பட்ட போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும். போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் சிதறிக் கிடக்கும் மாலைகள் மற்றும் பிற பொருட்களை அகற்றுவதில் போலீசார் உள்ளாட்சி அமைப்பு நிர்வாகங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இறுதிச் சடங்கு ஏற்பாட்டாளர்களிடம், மலர் மாலைகள் மற்றும் மலர் வளையங்களை இறுதிச் சடங்கு நடைபெறும் இடத்திலேயே சேகரித்து, அவற்றை அப்புறப்படுத்த அறிவுறுத்த வேண்டும். ஊர்வலத்தின்போது அதிக எண்ணிக்கையிலான மாலைகளை எடுத்துச் செல்லவோ அல்லது சாலைகள் அல்லது வாகனங்கள் மீது அவற்றை வீசவோ கூடாது. மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சட்டம் தேவை
மேற்கண்டவாறு சுற்றறிக்கை வெளியிட்டபோதிலும், இறுதி ஊர்வலங்களின் போது ஒழுங்கீன சம்பவங்கள் தடையின்றி தொடர்கின்றன. மக்களுக்கு ஆபத்தை விளைவிப்பதாக உள்ளது.
பொது பாதுகாப்பு கருதி இறுதிச் சடங்கு ஊர்வலங்களை முறைப்படுத்துவதற்கான கட்டுப்பாட்டு மற்றும் தண்டனை விதிகளை உள்ளடக்கிய சட்டம் இயற்றுவதன் அவசியத்தை தமிழக அரசின் தலைமைச் செயலர் ஆய்வு செய்ய வேண்டும்.
அதே வேளையில், இறுதிச் சடங்குகளை நிறைவேற்றுவதற்கான அடிப்படை உரிமை எவ்விதத்திலும் தேவையின்றி சுருக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை ஜூலை 31 க்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.
திராவிட கலாச்சாரம் இதற்கு என்ன சொல்லும் ஹிந்துக்கள் ஊர்வலங்களை மட்டும் தான் இது நடக்கிறது தடைய்ய போராடுவோமாம் என்று சட்டம் இயற்று வார்கள். ஆனால் முஸ்லிம்கள் இறுதி ஊர் வலத்தில் பாராட்ட தக்கது நிசப்தமாக ஆரவாரமின்றி எடுத்து செல்கிறார்கள். கிருஸ்துவர்கள் கூடா மௌனமாககிய தான் எடுத்து செல்கிறார்கள். பெரும்பாலும் பெரிய காரில் எடுத்து செல்கிறாரர்கள். பிராமணர்கள் சைவம் எடுத்து செல்லும் போனது மௌன மாக செல்கிறார்கள் முன்பெல்லாம் இது மாதிரி இல்லை. சில சமூக மக்கள் ஊர்வலத்தில் சமீப காலங்க்ளில் சினிமாவில் காட்டுவது போனால் ஆர்பாட்டம் செய்கிறார்கள். உறவினர்கள் இது போனால் செய்வதில்லை. அதிக படிப்பறிவற்ற இளவட்டங்க்கள் குடித்து விட்டு அத்து மீறி நடக்கிறார்கள். இது அருவருக்க செய்யறது. இறந்தவர்கள் போராடர்கள் ஓட்டுவதும் அருவருப்பு தான். தண்டனை கடுமையாக்கினால் தான் திருந்தும்.
அந்த இறுதி ஊர்வலத்துடன் அந்த வன்முறையாளர்களுக்கும் இறுதி ஊர்வலம் போலீசு செய்திருக்க வேண்டும்.
இதுவெல்லாம் ஒரு பிரச்சினையா. அதிக சப்தத்துடன் ஒலியும் கூடவே பாட்டும் போட்டுக்கொண்டு கொடூரமாய் செல்லும் வாகனங்கள் தெரியவில்லையா. மோசமான சாலைகள் தெரியவில்லையா. கேவலமாய் உள்ள கழிவு நீர் கால்வாய்கள் தெரியவில்லையா. சாலையின் மேலேயே செய்துள்ள ஆக்கிரமிப்புகள் தெரியவில்லையா. தூசுகள் நிறைந்த போக்குவரத்து தெரியவில்லையா.
உயிரோடு இருக்கும் போது இறந்தவனுக்கு ஒரு வேளை சாப்பாடு போடாத உறவுக்கார கூட்டம், இறந்த பின் அவன் குடும்ப செலவில் கூத்தடிப்பது கேவலம். கேடு கேட்ட போதை, டாஸ்மாக் பிறப்பில் இருந்து இறப்பு வரை தமிழனை ஆட்கொண்டு விட்டது. திருமணத்திலும் தண்ணி பார்ட்டி. குத்தாட்டம். கேவலமான பிறவிகள்.
இதில் இருந்து தமிழகம் கலாச்சாரத்தில் எவ்வளவு பின் தங்கி உள்ளது என்பது தெரிகிறது. சில சமூகங்கள் கல்வி அறிவு பெற்ற பின்பும் செய்யும் சமூக அட்டூழியங்கள் ரொம்ப மோசமான நிலைமையில் உள்ளது. கடுமையான தண்டனைகள் மற்றும் 1 லக்ஷத்திற்கு குறைவு இல்லாத பைன் போன்றவை மூலமே இதை கட்டுப்படுத்த முடியும்.
நானும் எனது குடும்பத்தாரும் கோயிலுக்கு போக பஸ்ஸில் பிராயாணம் செய்த போது எதிரே வந்த சவ ஊர்வலத்தில் போதை மற்றும் கஞ்சா கூத்தாடிகள் சிலர் அந்த பிரேதத்திற்கு முன்பு மலர் தூவி வந்த போது எங்கள் பஸ்ஸில் உள்ள டிரைவர் மற்றும் எங்கள் மீது சவ மலர்களை தூவி சென்றான்கள். அன்று ஒரு வித மன உளச்சலோடு கோவிலுக்கு சென்றோம்
ஆடிய ஆட்டமும், ஓடிய ஓட்டமும் ஒருநாள் ஓயும் போது கூடிய கூட்டம் தான் சொல்லும் நீ யார் என்பதை! இறந்தவர்களின் உடலை மாவட்ட ஆட்சியர் அனுமதியுடன் வீட்டின் காலி இடத்தில் புதைக்கலாம்..... மொபைல் தகன வண்டிகளை அழைத்தால் வீட்டில் அல்லது தெருவில் வைத்து பொசுக்கி சாம்பலை சட்டியில் போட்டு உங்கள் கையில் கொடுத்துவிடுவார்கள்.... குறிப்பிட்ட சமுதாய மக்கள் கல்யாண சாவு என சொல்லி பட்டாசு வைத்து, குடித்து குத்தாட்டம் போட்டு ஊர்வலமாக செல்வார்கள்.... இது இடத்துக்கு இடம் மாறுபடும்.... இதே அதிகார வர்க்க அரசியல்வாதி சவ ஊர்வலமாக இருந்தால் இராணுவ, போலீஸ் மரியாதை உண்டு துப்பாக்கி குண்டு முழங்க அடக்கம் செய்யப்படும்.....
ஆண்கள் குடித்ததால் கதறி அழுத்த பெண்களின் கண்ணீர் இந்த நீதிபதிகளுக்கு தெரியவில்லை தகப்பனார்கள் குடித்து அழிந்ததால் கண்ணீர் விட்ட பிள்ளைகளின் அழுகுரல் இந்த நீதிபதிகளுக்கு தெரியவில்லை ஆனால் பேருந்தில் உதைத்தவுடன் இந்த நீதிபதிகளுக்கு சொரணை வந்துவிட்டது கண்ணீர் வருகிறது அப்பப்பா இவர்கள்தான் நாட்டை நாசமாக்க முக்கியமாக தேவை வெள்ளையன் ஏற்படுத்திய சட்டத்துறை பலே பலே நன்றாகவே வேலை செய்கிறது
பெண்களை துன்புறுத்தும் குடிகார கணவன்மார் மீதோ வாழ்க்கையையே நாசமாக்கிய குடிகார தகப்பன்மார் மீதோ மனைவியரும் பிள்ளைகளும் புகார் செய்ய தயாரா? செய்தால் டாஸ்மாக் நாட்டு போலீஸ் புகார் பதிவு செய்யுமா? இதெல்லாம் நடந்தால் தான் நீதிபதிகள் எதுவும் செய்ய முடியும். மேலும் வழக்கு நடத்த யார் செலவு செய்வது? யார் நீதிமன்றங்களுக்கு அலைவது?
நீ மது அருந்திவிட்டு சாராயம் குடித்துவிட்டு உன் குழந்தைகளின் வாழ்க்கையை நாசமாக்கலாம் உனது குடும்பத்தை நாசமாக்கலாம்
உன் உறவினர்களின் குடும்பத்தையும் நாசமாக்கலாம்
ஆனால் அரசாங்கத்தின் சொத்துக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது
ஏற்படுத்தினால்
நிச்சயம் அது தவறுதான்
இந்த நாட்டு நல தத்துவத்தை கண்டுபிடித்த அறிவுக்கொழுந்து நீதிபதிகளுக்கு சாபங்கள்
அரசாங்க சொத்து நாசமாகி இருந்தால் வழக்கு அந்தரத்தில் நிற்கும். இது தனியார் கல்லூரி பேருந்து. அதனால் தான் இவ்வளவு தூரம் போய் இருக்கிறது.
இதில் ஒருவரின் பக்க அறிக்கை மட்டுமே வெளியாகி இருக்கிறது. அந்த School வேனில் இருந்த மாணவிகள் என்ன சொல்லி கேலி செய்து சப்தமிட்டனர் என்ற அறிக்கை வெளியாகவில்லை! இந்த அமரர் இறுதி ஊர்வல பிரச்சனையில் உயர்நீதி மன்றமோ அல்லது உச்ச நீதிமன்றமோ புத்திமதி சொல்லி அதை கண்டித்து என்ன தீர்ப்பு வழங்கினாலும்
அதை யாரும் சட்டை பண்ண போவதில்லை. ஏனென்றால் இது மரணம் அடைந்தவருக்கு செலுத்தும் கடைசி இறுதி மரியாதையாகும். இது நான் சார்ந்த தேவர் (கள்ளர்) சமூகம் என்றாலும் சரி மற்ற அனைத்து சமூகம் என்றாலும் இதுதான் நடைமுறை இதை ஓரளவிற்கு போலீஸ் கெஞ்சி கூத்தாடி கூட்டத்தினரை கட்டுப்படுத்தலாமே தவிர
எந்த நீதிமன்றத்தின் உத்தரவினாலும் இந்ந இறுதியாத்திரை நடைமுறையை தடுத்து நிறுத்த முடியாது.
"அந்த School வேனில் இருந்த மாணவிகள் என்ன சொல்லி கேலி செய்து சப்தமிட்டனர் என்ற அறிக்கை வெளியாகவில்லை" சுப்பு, இது உங்களுக்கே அசிங்கமா தெரியலையா? அதுவே கல்யாண ஊர்வலமாக இருந்தால் மாணவிகள் கேலி செய்திருக்க வாய்ப்பு உண்டு.
"அந்த School வேனில் இருந்த மாணவிகள் என்ன சொல்லி கேலி செய்து சப்தமிட்டனர் என்ற அறிக்கை வெளியாகவில்லை" சுப்பு, இது உங்களுக்கே ஓவர் தெரியலையா? அதுவே கல்யாண ஊர்வலமாக இருந்தால் மாணவிகள் கேலி செய்திருக்க வாய்ப்பு உண்டு.
"அந்த School வேனில் இருந்த மாணவிகள் என்ன சொல்லி கேலி செய்து சப்தமிட்டனர் என்ற அறிக்கை வெளியாகவில்லை" சுப்பு, இது உங்களுக்கே ஓவர் ஆ தெரியலையா? அதுவே கல்யாண ஊர்வலமாக இருந்தால் மாணவிகள் கேலி செய்திருக்க வாய்ப்பு உண்டு.
சுப்பு அவர்களின் கருத்து சிந்தித்து எழுதப்பட்டதா என்று தெரியவில்லை. மாணவிகள் கேலி செய்தனரா என்று கேட்டதே தப்பு.மேலும்
-
மேயர், துணை மேயர் பதவிகளை தக்க வைத்தது பா.ஜ., காங்கிரஸ் வேட்பாளர்கள் 9 ஓட்டுகளுடன் படுதோல்வி
-
ரபி பருவ கோதுமை கொள்முதல் விதிமுறை தளர்வு தரம் குறைந்த தானியமும் வாங்கப்படும் என முதல்வர் ரேகா அறிவிப்பு
-
அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து
-
ரூ.70 லட்சம் கொள்ளையடித்த 5 பேர் கைது; ரூ.53 லட்சம் மீட்பு
-
வாடகைக்கு குடியிருந்த வாலிபரை கொன்ற வீட்டு உரிமையாளர் சரண்
-
இரட்டை கொலை வழக்கில் தேடப்பட்டவர் பிடிபட்டார்