தேவகோட்டை அருகே மாட்டு வண்டி பந்தயம்

தேவகோட்டை, ஏப். 30 -

தேவகோட்டை அருகே ஏழு கோட்டை நாட்டைச் சேர்ந்த சித்தானுாரில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி முளைக்கொட்டு திருவிழா நடந்தது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடந்தன. இத்திருவிழாவை முன்னிட்டு கிராமத்தின் சார்பில் மாட்டு வண்டி பந்தயம் கண்ணங்குடி மெயின் ரோட்டில் நடந்தது. பெரிய மாடு, சின்னமாடு, பூஞ்சிட்டு என்று மூன்று பிரிவாக நடந்த பந்தயத்தில் 54 ஜோடி மாடுகள் ஓடியது. வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை, ரொக்கப்பரிசு வழங்கப்பட்டன.

Advertisement