கோவிலுக்குள் நுழைய நாத்திகர் உரிமை கோர முடியுமா?: சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்றம் முக்கிய கேள்வி
- டில்லி சிறப்பு நிருபர் -
“வட மாநிலத்தில் வசிக்கும் ஒரு நாத்திகர், தென்கோடியில் இருக்கும் ஒரு கோவிலுக்குள் நுழைய எப்படி உரிமை கோர முடியும்?” என சபரிமலை வழக்கில், உச்ச நீதிமன்றம் மிக முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளது.
அவர் வாதிடுகையில், “உச்ச நீதிமன்றம் 2018ல் அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்ல அனுமதி வழங்கியது. அதை ஏற்று பிந்து அம்மினி மற்றும் கனக துர்கா என்ற பெண்கள் சபரிமலைக்கு சென்றனர். அதில், ஒரு பெண் பட்டியலினத்தைச் சேர்ந்தவர். “அவரை கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. தீண்டாமை அடிப்படையில் அவரை தடுப்பது அரசியல் சாசன பிரிவு 17ன் கீழ் குற்றம். “ஜாதி பாகுபாடு இல்லாமல் அனைத்து ஆண்களும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படும் நிலையில், பெண்களுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்படுகிறது,” என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், 'பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால், அப்பெண் தடுத்து நிறுத்தப்படவில்லை. 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு அனுமதி இல்லை என்ற வயது வரம்பு கட்டுப்பாடு காரண மாகவே அப்பெண் தடுத்து நிறுத்தப்பட்டார்' என பதில் அளித்தனர்.
அடிப்படை உரிமை
இதை ஆட்சேபிக்கும் வகையில் மூத்த வக்கீல் இந்திரா ஜெய்சிங் முன்வைத்த வாதம்: ஒரு பெண்ணின் வாழ்நாளில் மிகவும் ஆக்கப்பூர்வமான 10 முதல் 50 வயது வரையிலான காலகட்டத்தை முடக்குவது, அவரது அடிப்படை உரிமையை பறிப்பது போன்றது. பாதி வாழ்நாளை மட்டும் வாழுங்கள் என பெண்களுக்கு அறிவுறுத்த முடியுமா? 10 முதல் 50 வயது வரையிலான வாழ்க்கையை தவிர்த்து விடுங்கள். 10 வயதுக்குள்ளாகவும், 50 வயதுக்கு மேற்பட்டும் வாழுங்கள் என வாழ்க்கையை பிரித்து வாழச் சொல்ல முடியுமா? அது, அவர்களது வாழ்நாளை கணிசமாக இழக்க வைக்கும்.
கோவிலுக்குள் சென்று வழிபடுவது என்பது அனைவருக்குமான அடிப்படை உரிமை. அரசியல் சாசனத்தின் 25(1) பிரிவு அந்த உரிமையை வழங்கி இருக்கிறது.
போதிய பாதுகாப்பு
கடந்த 2018 தீர்ப்பை மதித்து இரு பெண்களும் சபரிமலை கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பியதும், சிலர் தீட்டுப்பட்டு விட்டதாக கூறி, அவர் களது மனதை புண்படுத்தி விட்டனர். இது குறித்து, இதே நீதிமன்றத்தில் ஒரு மனுவை நான் தாக்கல் செய்துள்ளேன். அந்த சம்பவத்திற்கு பின், வேறு எந்த பெண்ணும் சபரிமலைக்கு செல்ல முயலவில்லை. அதற்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பு வழங்காததே காரணம். பெண்கள் சபரிமலை கோவிலுக்கு சென்று வர போதிய பாதுகாப்பு வழங்க மாநில அரசு மறுத்துவிட்டது.
இது தொடர்பாகவும் ஒரு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளேன். அதில், அந்த பெண்கள் யார்? உண்மை யிலேயே அவர்கள் பக்தர்களா? எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்ற விபரங்களையும் அதில் குறிப்பிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கட்டத்தில் குறுக்கிட்ட நீதிபதி நாகரத்னா, “இந்த உரிமையை யார் கோரியது? ஒரு பக்தரிடம் இருந்து இந்த உரிமை கோரல் வந்ததா அல்லது நாத்திகரிடம் இருந்து வந்ததா; உரிமையை கோரச்சொல்லி துாண்டியது யார்?
“வட மாநிலத்தில் இருக்கும் ஒரு நபர், அதுவும் நாத்திகர் ஒருவர், தென் மாநிலத்தில் உள்ள ஒரு கோவிலின் ஆசாரங்களில் தலையிடவோ அல்லது நுழையவோ உரிமை கோருவதை நாம் பரிசீலிக்க வேண்டியுள்ளது,” என்றார்.
உள்நோக்கம்
நீதிபதி அசானுதீன் அமானுல்லா ஒரு தார்மீக கேள்வியை எழுப்பினார். “ஒருவர் கடவுள் மீது தீவிர நம்பிக்கை கொண்டவர் என கூறி, கோவிலுக்கு சென்று பக்தர்களின் பொதுவான உணர்வுகளை புண்படுத்தும் வகையில் நடந்து கொண்டால், அது சரியாக இருக்குமா? அந்த செயல்பாட்டின் உள்நோக்கத்தையும் நாம் உற்று நோக்க வேண்டும் அல்லவா?” என்று கேட்டார்.
இதைத் தொடர்ந்து பேசிய நீதிபதி நாகரத்னா, “நம் நாடு பல்வேறு நம்பிக்கைகளை கொண்டது. பன்முகத்தன்மையே நம் நாட்டின் வலிமை. ஒவ்வொரு சமயப் பிரிவினருக்கு இருக்கும் உரிமைகளை பாதுகாப்பதன் மூலமே நாட்டில் ஒற்றுமையை நிலைநாட்ட முடியும். “எனவே, அந்தந்த சமய மரபுகளை நாம் மதிக்க பழக வேண்டும்,” என்றார்.
இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடக்கும் என கூறிய நீதிபதிகள், அடுத்த விசாரணையை மே 5ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
நாத்தீகர்கள் கோவிலில் நுழைய முடியுமா? இல்லை அவர்கள் சிலையை மட்டும் கோவில் வாசலில் வைத்து வழிபடலாம். இந்த கேள்வியை யாரிடம் கேட்கிறது கோர்ட் அது தன்னைப் பார்த்தே கேட்டுக் கொண்டு விடை அளிக்க வேண்டும் கடவுள் நம்பிக்கை அற்றவன் கோவில் சொத்தை திருடுபவனிடம் கோவிலை ஒப்படைக்கும் போது இந்தக் கேள்வியை கோர்ட் கேட்டுக் கொண்டு தீர்ப்பு சொல்லி இருக்க வேண்டும் இந்துக்களுக்கும் இந்து கடவுள் கோவில்கள் மேல் வரும் வழக்குகள் தான் கோர்ட்டில் இருக்கின்றன. மற்ற மதத்தைய பற்றி ஏதாவது உண்டா? இதைப்பற்றியும் நாம் கோர்ட்டிடம் கேட்க வேண்டும்
நாத்திகர்கள் ஹிந்து ஆலய வாரிய ( தேவஸ்வம் போர்டு ) நிர்வாகிகளாக இருக்கலாம் என முன்பு கோர்ட் கூறியுள்ளது. கம்யூனிஸ்டு அரசும் மதநம்பிக்கையற்ற பலரை நியமித்தது. பள்ளிவாசல் அல்லது சர்ச் நிர்வாகக் குழுவில் கடவுள் இல்லை எனக் கூறுபவர் நுழைய முடியுமா என்ற கேள்வி மட்டும் கோர்ட்டில் எழுப்பப்பட்டதுண்டா?
எங்களைக் கேட்டால்? நீங்கதான் முடிவு பண்ணி சொல்லணும் ஏட்டையா.
பெண்கள் மசூதிக்குள் செல்ல இயலுமா கனம் கோர்ட்டார் அவர்களே
ஆத்திகனுக்கு கோவிலில் என்ன வேலை?
உண்டியல் காச ஆஸ்தியாக்கத்தான் ???
1). இதற்கு எல்லாம் ஒரே தீர்வு பொதுச் சிவில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்.
2). அரசியல் சாசனம் மற்றும் நீதிமன்றம் இந்த சட்டத்தை கொண்டு வர வலியுறுத்தி உள்ளது.
3). ஆனால் எந்த அரசாங்கமும் நடவடிக்கை எடுப்பது இல்லை.
4) பழைய பிரிட்டீஷ் காலத்து சட்டங்களை மாற்றி நவீன இந்தியாவிற்கு தேவையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.
அரசியல் சாசனப்பிரிவு கொடுக்கும் அதே தனிநபர் உரிமையை பயன்படுத்தி விசாரணை நடக்கும்போது நீதிமன்ற கூடத்தில் யார் வேண்டுமானாலும் நுழைய சட்டம் அனுமதிக்குமா? அல்லது நோயாளிக்கு அறுவைசிகிச்சை நடைபெறும்போது அந்த அரங்கில் யார்வேண்டுமானாலும் அனுமதிக்கப்படுவார்களா? இந்த உதாரணங்கள் சட்டத்தைத்தாண்டி நடைமுறை என்ற பழக்கம் கடைபிடிக்கப்படுகிறது. அதுபோலத்தான் சில கோவில்களில் நுழையவும் பூஜை முறைகளிலும் பல நடைமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. போலி ஆசாமிகளைத்தவிர மற்ற உண்மையான பக்தர்களுக்கு அதில் எந்த பிரச்னையுமில்லை.
முக்கிய கேசு.. முக்காத கேஸுன்னு கோடி கணக்குல நொண்டி அடிச்சுகிட்டு இருக்கும்போது... இது அவசியமா அய்யா???
10 வயது முதல் 50 வரையிலான இஸ்லாமிய பெண்கள் அனைவரும் ஆண்களுக்கு நிகராக அதே மசூதியில் தொழுகை நடத்தலாமா..அந்த பெண்களின் உரிமை பறிக்கப் படுகிறதா என்றும் விசாரணை செய்யுங்கள் நீதிபதி அவர்களே..
ஏப்பா, அதுவெல்லாம் இதனால் பாதிக்கப்பட்டேன்னு ஒருத்தன் complaint கேஸ் பைல் செய்தால் தான் நடக்கும். அப்படி ஒரு கேஸ் பைல் ஆக்கினால் அவன் கோர்ட் விட்டு வெளியேறும்போதே கொல்லப்படுவான்.
இந்த வாதத்தை முன்வைக்க எவனுக்கும் தைரியமில்லை
அறிவாளித்தனமா கேள்வி கேட்டகிறதா நினைச்சுகிட்டு இப்படி மாட்டிவிட்டு முழிக்கிறதுக்கு பேசாமல்.....
அருண் பிரகாஷ் அறியாமையின் அடையாளம்
இஸ்லாமிய பெண்கள் எந்த வயதிலும் மசூதியில் நுழையவோ வழிபாடு செய்யவோ எந்த தடையும் இல்லை ஈத் திருநாளில் ஒரே மசூதியில் வெவ்வேறு தளங்களில் ஒரே நேரத்தில் பிரார்த்தனை நடைபெறும் ஆயிரமாயிரம் மசூதிகள் நம் நாட்டில் உதாரணமாக உள்ளது புரிதல் இல்லாமல் செயல்படும் உங்களை போன்றவர்களால்தான் பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்த இயலாத நிலையில் நாடு உள்ளது. பன்முகத்தன்மைதான் இந்தியாவின் அடையாளமெனில் பொதுமைப்படுத்துவது அறியாமைதானே??
பெண்கள் வீட்டில் குழந்தைகளையும் வயதானவர்களையும் கவனிக்க வேண்டிய பொறுப்பு இருப்பதனால் ஐவேளை பிரார்த்தனையில் மசூதி சென்றுதான் வழிபடவேண்டும் என்கிற கட்டாயத்தில் இருந்து வீட்டிலேயே பிரார்த்தனை செய்து கொள்ளலாம் என்கிற சலுகையை தவறாக புரிந்து கொண்டவர்களை திருத்த முடியாது.மேலும்
-
கப்பல் அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி; டி.ஆர்.டி.ஓ., சாதனை
-
இந்தியாவிலிருந்து திருடப்பட்ட 657 பழங்கால சிலைகளை திருப்பி கொடுத்தது அமெரிக்கா
-
அதிகரிக்கும் வெப்ப அலை... மதிய வேலையில் பணியை நிறுத்தியது தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
-
ஹார்முஸ் ஜலசந்தி பெயரை மாற்றணும்; தனது பெயரை சூட்ட சொல்கிறார் அதிபர் டிரம்ப்
-
ஈரான் போருக்கு 2 லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபாய் செலவு; கணக்கு சொல்கிறது பென்டகன்
-
கோஹினூர் வைரத்தை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படையுங்கள்; பிரிட்டன் மன்னரிடம் வலியுறுத்தும் மம்தானி