மேற்காசிய போர் பதற்றத்தால் விலைவாசி அதிகரிக்க கூடும்: மத்திய நிதியமைச்சகத்தின் அறிக்கை
புதுடில்லி: மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றங்கள், இந்தியாவில் பணவீக்க உயர்வு, வர்த்தகத்தில் பாதிப்பு போன்றவற்றை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக மத்திய நிதி அமைச்சகத்தின் மாதாந்திர பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தியாவின் வலுவான உள்நாட்டு தேவை மற்றும் பொருளாதார கட்டமைப்பு, இந்த பாதிப்புகளை எதிர்கொள்ள உதவும் என கூறப்பட்டுள்ளது.
அதில், மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
போர் காரணமாக கச்சா எண்ணெய் மற்றும் உரங்களின் வினியோகத்தில் தடை, உற்பத்தி செலவை அதிகரித்து, பணவீக்கத்தை உயர்த்தக்கூடும்
'எல் நினோ'வின் தாக்கம் காரணமாக இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட குறைவாகவே இருக்கும் என கணிப்பு. இது, விவசாய உற்பத்தி மற்றும் உணவு பொருட்களின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்
உலகளாவிய நிச்சயமற்ற சூழலால் ரூபாய் மதிப்பு பலவீனமடைவது, இறக்குமதி செலவை அதிகரித்து பணவீக்கத்திற்கு மேலும் அழுத்தம் தருகிறது
உர உற்பத்திக்கான எரிவாயு ஒதுக்கீடு அதிகரிப்பு மற்றும் காரீப் பருவத்திற்கான உர மானியம் 12 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது
வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களின் மூலதனம் மற்றும் சொத்து மதிப்பு வலுவாக இருப்பதால், நிதித்துறையில் பெரிய பாதிப்புகள் இருக்காது
சமீபத்தில் கையெழுத்தான தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் போன்றவை ஏற்றுமதியை ஊக்குவிக்க உதவும்
அடுத்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 - 7.4 சதவீதமாக இருக்க வாய்ப்பு.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (2)
Raj - Chennai,இந்தியா
30 ஏப்,2026 - 06:37 Report Abuse
போர் இப்போ தான் வந்தது, விலைவாசி போருக்கு முன்பே உச்சத்தை தொட்டு விட்டது. 0
0
Reply
Vasan - ,இந்தியா
30 ஏப்,2026 - 06:09 Report Abuse
நேற்றோடு தேர்தல் முடிந்து விட்டது. அடுத்து விலைவாசி ஏற்றம் தான். ஏப்ரல் 30ம் தேதி நள்ளிரவிலிருந்து பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்பார்க்கலாம். 0
0
Reply
மேலும்
-
கப்பல் அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி; டி.ஆர்.டி.ஓ., சாதனை
-
இந்தியாவிலிருந்து திருடப்பட்ட 657 பழங்கால சிலைகளை திருப்பி கொடுத்தது அமெரிக்கா
-
அதிகரிக்கும் வெப்ப அலை... மதிய வேலையில் பணியை நிறுத்தியது தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
-
ஹார்முஸ் ஜலசந்தி பெயரை மாற்றணும்; தனது பெயரை சூட்ட சொல்கிறார் அதிபர் டிரம்ப்
-
ஈரான் போருக்கு 2 லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபாய் செலவு; கணக்கு சொல்கிறது பென்டகன்
-
கோஹினூர் வைரத்தை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படையுங்கள்; பிரிட்டன் மன்னரிடம் வலியுறுத்தும் மம்தானி
Advertisement
Advertisement