திருமா மீதான வழக்கு; ரத்து செய்தது ஐகோர்ட்
சென்னை: புதுச்சேரி கம்பன் கலை அரங்கத்தில், 2019ம் ஆண்டு நவம்பரில், வி.சி.க., மகளிர் அணி சார்பில் நடந்த நிகழ்ச்சியில், அக்கட்சி தலைவர் திருமாவளவன் பங்கேற்று பேசினார்.
அப்போது அவர், ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில், வெறுப்பு கருத்துகளை தெரிவித்ததாக, ஹிந்து முன்னணி பொதுச்செயலர் டி.என்.கண்ணன் புகார் அளித்தார். அதன்படி, புதுச்சேரி ஒதியஞ்சாலை போலீசார், திருமாவளவன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
புதுச்சேரி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் திருமாவளவன் தாக்கல் செய்த மனு, நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில், 'கல்விக்கு எதிரான சனாதன கொள்கை என்ற அடிப்படையில் தான் திருமாவளவன் பேசினார்; வெறுப்பு பேச்சு எதையும் பேசவில்லை.
'மூன்று ஆண்டுகள் மட்டுமே தண்டனை விதிக்கக்கூடிய பிரிவுகளில் பதிவான வழக்கில், ஆறு ஆண்டுகள் தாமதமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது' என்றனர்.
இதை ஏற்ற நீதிபதி, திருமாவளவனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதை திருமாவே நம்பலை போல. பேசிப் புட்டு அதுக்கப்புறம் நான் அப்புடி பேசலை அந்த அர்த்தத்தில் பேசலைங்குற கதை யெல்லாம் சொல்வாய்ங்க. நாம் பாத்துகிட்டு தானே இருக்கோம்..
சரியான தீர்ப்பாக தெரியவில்லை, அதை தாமதப்படுத்தியது யாரு என்பதையும் அவர்களுக்கான தண்டனை என்ன என்பதையும் தெரியப்படுத்த வேண்டும்
இதே தமிழ்நாட்டில் நடந்திருந்தால், கையாலாகாத போலீஸ், திமுகா வேணுமுணெ வழக்கு பதிவை
தாமதப்படுத்தியது.. ஊழல், அது இதுன்னு என்னென்ன வசைபாடுவார்கள் என வரலாறு சொல்கிறது..
Traversity
எந்த வழக்கை சீக்கிரம் தாக்கல் செய்ய வேண்டும் எதை தாம படுத்த வேண்டும் என்று காவல் துறை நன்கு அறியும்
பிஜெபி ஆளும் மாநில போலீஸ் தாமதம் செய்து தவறு செய்துள்ளது. மேலிடம் என்ன கூறும்?. கிரிமினல் வழக்குகளில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ததுண்டு. அது ஒரு குற்றமா?.
அவர் பேசியது தவறா இல்லையா என்று தீர்ப்பு கூறப்படவில்லை. சனாதனத்துக்கு தொன்று தொட்டு நம் மூதாதையர்கள் கடைபிடித்த கொள்கை என்பதுவே அகராதி குறிப்பிடுகிறது என்ற வகையில் கல்விக்கு எதிரானது சனாதனம் என்றுதான் அவர் பேசினார் என்றால் அது தவறில்லை. ஏனெனில் கல்வி நாளுக்கு நாள் நம் அறிவை மேம்படுத்தி மூடக் கொள்கைகளை அகற்றுகிறது ஆனால், 2019ல் பேசியத்திற்கு காலம் கடந்து வழக்கைப் பதிவு செய்த காவல்துறைக்கு கண்டனம் இல்லையா?
புதுச்சேரி ஒதியஞ்சாலை போலீசார் பதிவு செய்த வழக்கை, அரசாங்க வக்கீல் ஏன் மூன்று ஆண்டுகளுக்குள் கோர்ட்டில் தாக்கல் செய்யவில்லை?
அந்த மாதிரி வக்கீல்களை பதவியை பறித்துக் கொண்டு தண்டனையும் கொடுத்தால் தான் சரியாக இருக்கும்.
அரசு சம்பளம் போதவில்லை என்று எதிர் தரப்பிலிருந்து அன்பளிப்பு பெற்று இருப்பார்.
இப்படி சாதி மதம் என்று பிரிவினைவாதம் பேசும் தீவிரவாதத்திற்கு ஊக்குவிக்கும் அரசியல்வாதிகளை வழக்குகளிலிருந்து வெறுமனே தள்ளுபடி செய்தால் நீதிமன்றமே குற்றவாளிகளுக்கு துணை போனால் குற்றம் எப்படி குறையும்?
அது தான் சட்ட பாய்ன்ட்டை எதிர் கட்சி வக்கீல் பிடித்து இருக்கிறாரே. ஆளும் கட்சி காரர்கள் என்று தண்டங்களை அரசு வக்கீல்களாக நியமித்தால் இப்படி தான்.
நீதி மன்றங்களை எல்லாம் ஒரு பெரிய ஷாப்பிங் மாலாக மாற்றி விடுங்கள். நாட்டுக்கு நல்லது.
அப்புடி பண்ணினால் லூலூ காரன் வாங்கிப்புடுவான். ஏற்கனவே கோயம்பேடு பஸ் முனையத்தையே அவனுக்கு தாரை வார்த்து இருக்காய்ங்க.மேலும்
-
கப்பல் அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி; டி.ஆர்.டி.ஓ., சாதனை
-
இந்தியாவிலிருந்து திருடப்பட்ட 657 பழங்கால சிலைகளை திருப்பி கொடுத்தது அமெரிக்கா
-
அதிகரிக்கும் வெப்ப அலை... மதிய வேலையில் பணியை நிறுத்தியது தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
-
ஹார்முஸ் ஜலசந்தி பெயரை மாற்றணும்; தனது பெயரை சூட்ட சொல்கிறார் அதிபர் டிரம்ப்
-
ஈரான் போருக்கு 2 லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபாய் செலவு; கணக்கு சொல்கிறது பென்டகன்
-
கோஹினூர் வைரத்தை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படையுங்கள்; பிரிட்டன் மன்னரிடம் வலியுறுத்தும் மம்தானி